திங்கள், ஜூலை 11, 2016

கண்ணீர் அஞ்சலி!திரு,அரசரத்தினம் சந்திரராசா(புளியங்கூடல்)

அமரர்களான புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,திருமதி அரசரெத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் புதல்வரும்,பற்குணராசா,ஆனந்தன்,சண்முகா,தயா,யோகன்,காலம்சென்ற வித்யா ஆகியோரின் அன்புச் சகோதரருமாகிய திரு,அரசரெத்தினம் சந்திரராசா(சந்திரன்) அவர்கள் 06.07.2016 அன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருற்று நிற்கின்றோம்.சிரித்த முகமும்,வஞ்சமிலா நெஞ்சமும் கொண்டிருந்த ஒரு அன்பான மனிதரை நாம் இழந்திருக்கிறோம் என்பதை எண்ணி மனம் நொந்து நிற்கின்றோம்!அன்னாரது இழப்பால் கதிகலங்கி நிற்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த ஆறுதல்களை தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டிகொள்கின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக