புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வேலணை 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட
ஞானேஸ்வரி இரத்தினம்(NR) அவர்கள் 20-05-2012 அன்று காலமானார்.(மண்ணில் : 6 மார்ச் 1930 — விண்ணில் : 20 மே 2012) அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா(முன்னாள் புளியங்கூடல் மகாமாரி அம்பாள் தேவஸ்தான ஆதினகர்த்தா) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இரத்தினம்(NR Transport உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும், தனலட்சுமி, காலஞ்சென்ற தனபாலசிங்கம்(SM), பரமேஸ்வரி, தவபாலசிங்கம்(தவா), மகாலட்சுமி(மகா), கங்காலட்சுமி(கங்கா), துரைராஜசிங்கம் (ராஜன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், புவனேஸ்வரி, சிவஞானசெல்வம்(புளியங்கூடல் மகாமாரி அம்பாள் தேவஸ்தான அறங்காவலர்), கமலாம்பிகை, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிற்றம்பலம், தங்கேஸ்வரி, காலஞ்சென்ற சிவநாதன், கௌரி, யோகராஜா, குகன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற திருக்குலசிங்கம், காலஞ்சென்ற குணசுந்தரி, கோபாலபிள்ளை, ஆறுமுகம்(சிவலிங்கம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், வனஜா, வசந்தன், வதனி, மதிவதனி, வச்சலா, வதனா, வர்ஷன், கிரோஸ், சந்தோஸ், கேசவன், யாதவன், லோஜித், கானுகா, அபிலாஷா, ஆகாஷ், ஆதர்ஷியா ஆகியோரின் அன்புப் பேத்தியும், தருண், மானஷா, அஸ்மிதா, அட்சகி, அகரன், தமிழினியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் 24-05-2012 வியாழக்கிழமை அன்று இந்து முறைபடி கிரியைகள் நடைபெற்று புளியங்கூடல் நொச்சிபதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||||||
|