வெள்ளி, செப்டம்பர் 30, 2011

மரண அறிவித்தல்!

திரு.வீரகத்தி நாகமுத்து அவர்கள்
(ஓய்வுபெற்ற சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரதம எழுதுவினையர்)
பிறப்பு : 29 செப்ரெம்பர் 1940 — இறப்பு : 29 செப்ரெம்பர் 2011
நாரந்தனை தெற்கை பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் மத்தியை வதிவிடமாகவும் கொண்ட வீரகத்தி நாகமுத்து அவர்கள் 29-09-2011 வியாழக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரகத்தி, முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிராசா மற்றும் கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற விசாலாட்சி சரவணபவன்(முன்னாள் உப அதிபர் றோ.க.க.பாடசாலை - சரவணை), காலஞ்சென்ற சண்முகலிங்கம்(பிரதேசசபை முன்னாள் பிரதம எழுதுவினைஞர் - வெண்கலச்செட்டிக்குளம்), காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகரத்தினம், மற்றும் அருளானந்தசிவம்(இத்தாலி), குமரகுருபரன்(கணித ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யாழினி(பிரதேச செயலகம் - சண்டிலிப்பாய்), கமலினி(இத்தாலி), வாசுகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயகாந்தன்(மக்கள் வங்கி – யாழ்ப்பாணம்) , இளங்கோவன்(இத்தாலி), உதயராஜ்(கிராமசேவகர் - புங்குடுதீவு) ஆகியோரின் அன்பு மாமாவும்,
சாகித்தியா, சரனியா, இலக்கியா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-10-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்து முறைப்படி நடைபெற்று, சண்டிலிப்பாய் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்.
குமரன் ஆசிரியர் (சகோதரர்)இத்தாலி
தொலைபேசி:
00393317519795

ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

சிறந்த பண்பாளர் கார் மாமா!

புளியங்கூடலை சேர்ந்த நாகலிங்கம் சண்முகநாதன் அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியாதென்றே சொல்லலாம்.இவரை நாம் கார் மாமா என்றே அழைப்பது வழக்கம்.அநேகமானவர்கள் அப்படித்தான் அழைத்தார்கள்.எமது ஊரில் அதாவது புளியங்கூடலில் முன்பு வாகன வசதிகள் குறைவாகவே இருந்தது.(இப்போ எப்படி என்று தெரியவில்லை)ஆனால் எனக்கு தெரிந்த நாளிலிருந்து கார் மாமாவை காருடன்தான் பார்த்திருக்கிறேன்.எங்கள் ஊருக்கு அம்புலன்ஸ் இல்லாத குறையை போக்கியவர் கார் மாமா என்றுதான் நான் சொல்வேன்.எந்த வீட்டில் கூக்குரல் சத்தம் கேட்டாலும் எந்த சாமமாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உடனடியாக அங்கே சென்று பணத்தை பற்றியெல்லாம் யோசிக்காமல் நோயாளியை மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சேர்ப்பிப்பதுடன் வீட்டிற்கும் போய் தகவல் சொல்லி விட்டு செல்லும் சிறந்த பண்பாளர் கார் மாமா.உதவி புரிவதில் ஒரு கொடையாளனாகவே திகழ்ந்தவர்.எல்லோருடனும் மிகவும் பண்பாக பழகும் நற்குணமும் அவரிடம் இருந்த சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்.ஊரில் இருந்து இடம் பெயர்ந்து அவர் கொழும்பில் வசித்து வந்தார். நான் கொழும்பில் இருந்த நேரங்களில் அவர்களை போய் சந்திப்பது வழக்கம்.ஆனால் இன்று நம்மையெல்லாம் விட்டு அவர் வெகு தூரம் சென்று விட்டார் என்றபோதும்,அவரது நினைவுகளும் அவர் ஆற்றிய நன்மைகளும் என்றும் எம்முடன் கலந்திருக்கும் என்பதே உண்மை!அந்த வகையிலேதான் அவரது நீங்கா நினைவுகளை மனக்கதவூடாக புளியங்கூடல் மக்கள் சார்பில் கார் மாமாவிற்காக சமர்ப்பிர்கின்றேன்.