ஞாயிறு, மே 22, 2011

அம்மா உந்தன் நினைவினில் தவிக்கிறோம்!

இரண்டாம் ஆண்டு நினைவுகள்!
திருமதி.அரியகுட்டி அன்னபூரணம் அவர்கள்.
மண்ணில்:07-11-1940
விண்ணில்:22-05-2009

எத்தனை எத்தனை ஆண்டுகள்
போயினும்,
பெத்தனை உன்னை மறத்தல் முடியுமோ அம்மா!
நித்தமும் வேகிறோம்!வாடித் துடிக்கிறோம்!
அரவணைக்க தாயின்றி நாளும் அழுகிறோம்!
மீண்டும் ஒரு முறை பிறந்து வா அம்மா!
எங்கள் துயர்தனை போக்கிடு அம்மா!
தந்தையை பிரிந்து தவித்திருந்த வேளையிலே,
எங்களுக்கு துணையுண்டு எனக்கருதி
தந்தைக்கு துணையாக சென்றாயோ அம்மா!
எப்படி மறப்போம்?யார்க்கெடுத்து உரைப்போம்?
அம்மா நீயே வந்திடு தாயே!
அம்மாவின் பிரிவால் துயருறும்:
மக்கள்.மருமக்கள்.பேரப்பிள்ளைகள்.
மற்றும் உடன் பிறப்புக்கள்.
உறவுகள்.
சுழிபுரம்.