வியாழன், அக்டோபர் 25, 2018

மரண அறிவித்தல்!திரு,அரசரெத்தினம் பற்குணராசா(புளியங்கூடல்)

புளியங்கூடல் தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,அரசரெத்தினம் பற்குணராசா(பக்கு) அவர்கள் இன்று வியாழக்கிழமை (25.10.2018) அகாலமரணமானார் என்பதை மிகுந்த துயரோடு அனைவருக்கும் அறியத்  தருகின்றோம்.அன்னார் காலம் சென்றவர்களான அரசரெத்தினம் பொன்னம்மா மண இணையரின் புதல்வரும்,காலம் சென்ற சோமசுந்தரம்(காத்தி) மகேஸ்வரி மண இணையரின் மருமகனும்,
வாசுகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ராகுல்,ராகவி,ராஜிதா,ராகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலம் சென்ற சந்திரராசா,ஆனந்தராசா,
சண்முகமணி,தயானந்தன்,யோகானந்தன்,
காலம் சென்ற வித்தியா ஆகியோரின் நேசமிகு சகோதரரும்,

காலம் சென்ற மனோ,ரஞ்சிதன்,வடிவேல்,
கிருஷ்ணதாஸ்,விவேகானந்தன்,
காலம் சென்ற கலைச்செல்வி ஆகியோரின் மைத்துனரும்,

இந்துசனின் மாமனாரும் ஆவார்.

அன்னாரது இறுதி நிகழ்வுகள் நாளை காலை 10:00 மணியளவில் புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று புளியங்கூடல் சுருவில் இந்து பொது
மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலைஉற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

திங்கள், அக்டோபர் 22, 2018

கண்ணீர் அஞ்சலி!திரு,கந்தசாமி நிமலன்(புளியங்கூடல்)

புளியங்கூடலை சேர்ந்த திரு,கந்தசாமி நிமலன் அவர்கள் காலமானார் என்பதறிந்து மிகவும் துயருற்று நிற்கின்றோம்.ஆசிரியர்களான கந்தசாமி செல்வநாயகி மண இணையரின் புதல்வனாக வந்துதித்த நிமலன் அவர்கள் இளம் வயதிலேயே தனது பெற்றோர்,உடன்பிறப்புக்கள்,மனைவி,பிள்ளைகள்,நட்புக்கள்,
21.08.1978-19.10.2018
சுற்றத்தார் என அனைவரையும் பிரிந்திருப்பது மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.நடராஜா வித்தியாலயத்தில் நாம் மாணவர்களாக இருந்த காலத்தில் அன்பு,அரவணைப்பு,கண்டிப்பு என எமக்கெல்லாம் நல்ல குருவாக இருந்த செல்வம் ரீச்சரின் குடும்பத்தில் இத்தகையதொரு இழப்பு வந்திருப்பது எல்லோருக்கும் பெரும் மன வேதனையை கொடுத்திருக்கிறது.இத்தருணத்தில் அவர்களது குடும்பத்தாருக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன் நிமலன் அவர்களது ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!