ஞாயிறு, ஏப்ரல் 12, 2020

மரண அறிவித்தல்!திருமதி,மகேஸ்வரி சோமசுந்தரம்[புளியங்கூடல்]

புளியங்கூடல் தெற்கை சொந்த இடமாகக் கொண்டிருந்த திருமதி,மகேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள்11.04.2020 சனிக்கிழமை அன்று காலமானார்.இவர் காலஞ்சென்ற சோமசுந்தரம்[கார்த்தி]அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற மனோரஞ்சன்[மனோ], வடிவேல், திருமதி வாசுகி பற்குணராசா, கிருஸ்ணன், ஆனந்தன் மற்றும் காலஞ்சென்ற செல்வி அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார்.இன்று ஞாயிற்றுக்கிழமை அன்னார்தம் இறுதிக்கிரிகைகள் அவரது இல்லத்தில் இடம்பெற்று புகழுடல் புளியங்கூடல் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்:
குடும்பத்தினர்
புளியங்கூடல் தெற்கு
ஊர்காவற்றுறை  

புதன், ஏப்ரல் 08, 2020

அஞ்சலிக்கின்றோம்!திரு,குகப்பிரசாத்[குகன் பிரித்தானியா]

அனனைதீவை பிறப்பிடமாக கொண்டிருந்தவரும் பிரித்தானியாவை வசிப்பிடமாக கொண்டிருந்தவருமான திரு,வீரவாகுப்பிள்ளை குகப்பிரசாத்[குகன்]அவர்கள் காலமானா செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது,திரு,குகன் அவர்கள் புளியங்கூடலின் பிரபல தொழிலதிபரான அமரர்களான இரத்தினம் ஞானேஸ்வரி தம்பதிகளின் இளைய மகள் கங்காலட்சுமியை[கங்கா]திருமணம் புரிந்து புளியங்கூடலை இன்னுமொரு சொந்த ஊராகக் கொண்டவர்,பிறந்த ஊரையும் புகுந்த ஊரையும் இரு கண்களாக நேசித்தவர்.அவர்தம் திடீர் இழப்பு செய்தி அதிர்ச்சிமிகு கணங்களாகவே இருக்கிறது.அன்னாருக்கு எம் அஞ்சலிகளை காணிக்கையாக்குவதுடன் இப்பேரிழப்பால் துயர் கொண்டு நிற்கும் கங்கா அக்கா மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு எம் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம்!