திங்கள், ஜூலை 31, 2017

கண்ணீர் நினைவுகள்!திருமதி பரிபூரணம் கந்தசாமி(புளியங்கூடல்)

வந்தது:19.04.1934 சென்றது:29.07.2017
புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பரிபூரணம் கந்தசாமி அவர்கள் 29.07.2017 அன்று அவரது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி மிகவும் பேரிடியாய் விழுந்தது.மிகவும் நல்ல எண்ணம் கொண்டவர்களாகவும்,அயலவர்களுடன் எல்லாம் அன்போடு பழக்கக்கூடியவர்களாகவும் அவரும் அவரது கணவர்,பிள்ளைகளும் விளங்கினார்கள்.இன்று இந்த தாயாரை புளியங்கூடல் மண் இழந்திருப்பது உண்மையில் ஒரு பேரிழப்புத்தான்.இத்தருணத்தில் அவரது பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள் உள்ளடங்கிய குடும்பத்தினருக்கு எம் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

திங்கள், ஜூலை 17, 2017

மரண அறிவித்தல்!வேலாயுதம் ஜெயசீலன்(புளியங்கூடல்-சுவிஸ்)

வரவு:25.10.1966-விரைவு:12.07.2017
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bützberg Langenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் ஜெயசீலன் அவர்கள் 12-07-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம்,புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரெத்தினம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரசிகலா(ரஜி) அவர்களின் அன்புக் கணவரும்,
நவீனா, காலஞ்சென்ற சாயினா, நர்மிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரஞ்சனாதேவி(லண்டன்) சிறிமுருகன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 
கஜீபரன் அவர்களின் அன்பு மாமனாரும், குணராஜா(லண்டன்), ஜெயபாலன்(நெதர்லாந்து), ஜெயசந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராகினி(வவுனியா), ஜெயமங்களசிரோன்மணி(ஜெர்மனி), லீலாதேவி(கனடா),லலிதாதேவி(லண்டன்),விமலாதேவி(ஜெர்மனி), விஜிகலா(சங்கானை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,யதீசன், யனுசா,தஷாங்கனி, சானுஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும், கம்ஷாயினி, பிரஷாயினி ஆகியோரின் பெரிய தகப்பனாரும், மதுமிதா, நிரோஜன், நிவாகர், நிதர்சன், டாலினி, கஜிபன், மீரா ஆகியோரின் சிறிய தகப்பனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்.
நிகழ்வுகள்:
பார்வைக்கு திகதி:
வெள்ளிக்கிழமை 14/07/2017, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland.

பார்வைக்கு திகதி:
சனிக்கிழமை 15/07/2017, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland.

பார்வைக்கு திகதி:
ஞாயிற்றுக்கிழமை 16/07/2017, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland. 

கிரியை திகதி:
திங்கட்கிழமை 17/07/2017, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Krematorium, Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland. 

தொடர்புகளுக்கு கஜீபன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41792964393

சந்திரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41788916759
வீடு — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41629231290
குணம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447950209491

சிறி — இலங்கை தொலைபேசி: +94774525543

திங்கள், ஜூலை 10, 2017

கண்ணீர் அஞ்சலி!திரு கதிரவேலு நவரத்தினம்(தம்பு-வேலணை)

வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்து பின்னர் மனைவி வழி ஊரான நாவற்குழியில் வசித்து வந்தவருமான எமது சித்தப்பா திரு கதிரவேலு நவரத்தினம்(தம்புச்சித்தப்பா)அவர்கள் மண்டைதீவுப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் சிறு காயங்களுக்கு ஆளாகி பின்னர்  அதுவே அவருக்கு நோயாகி காலன் அவரை கொண்டு சென்றான் என்று அறிந்து மிகவும் துயருற்றிருக்கிறோம்.சிறு வயதில் எமக்கு அன்பான கண்டிப்பான சித்தப்பாவாக இருந்தவர்.எம்முடன் எப்பவுமே சிரித்துப்பேசமாட்டார் பயம் இருக்கவேண்டும் என்று நினைப்பார்,என்றாலும் அன்பாக நடந்துகொள்வார்.08.12.1950ல் பிறந்த அவர்,அதே திகதியில் 08.07.2017ல் காலமானார்.சித்தப்பாவின் தந்தை கதிரவேலு,எமது அப்பப்பா கந்தையா,எமது அம்மம்மா பார்வதி ஆகியோர் உடன் பிறந்த சகோதரங்கள் ஆவர்.அன்னாரது ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகிறோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!