சனி, ஜூன் 30, 2012

மூன்றாம் ஆண்டு நினைவுகள்!

நெடுந்தீவில் பிறந்து புளியங்கூடலில் வசித்து யாழ்,கச்சேரியடியில் 30.06.2009ல் இறை பாதங்களை தொட்ட எம் தந்தை கந்தையா பசுபதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு வணக்க நாள்!
இன்றைய நாள் எம் மனங்கள்
 துன்பத்தீயில் கருகிய நாள்!
 உடல் சோர்ந்து தவித்த நாள்!
 நினைந்து நினைந்து வதைபட்ட நாள்!
 இன்றைய நாள் எம் உயிர் கொண்டு வந்த தந்தை
 தன் உயிர் பிரிந்து சென்ற நாள்! 
இன்றைய நாள் எம் தந்தையை இழந்த 
மூன்றாம் ஆண்டு நினைவு நாள்! 
எத்தனை எத்தனை ஆண்டுகளாயினும் 
ஒவ்வொரு நாட்களும் தந்தையின்
 எண்ணங்கள் நிலைத்திருக்கும் நாட்களே!


மனைவி,பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள்