செவ்வாய், அக்டோபர் 30, 2012

கண்ணீர் அஞ்சலி!சோமசுந்தரம் தனராசன் (புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,சோமசுந்தரம் தனராசன் அவர்கள் 24.10.2012அன்று காலமானார் என்பதறிந்து மிகவும் துயர் சுமந்து நிற்கின்றோம்.
சைவ மரபில் வந்துதித்த திரு,தனராசன் அவர்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கையும்,தன்னலமற்ற குணாளரும்,அமைதியான சுபாவமும் கொண்டவர்.வேலணை பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கிளை முகாமையாளராகவும் பின்னர் ஊர்காவற்றுறை பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கிளை முகாமையாளராகவும் கடமையாற்றி வந்தவர்.
அத்தோடு நில்லாமல் விவசாய செய்கையையும் மேற்கொண்டு வந்த திரு,சோமசுந்தரம் தனராசன் அவர்கள் காவல் தெய்வமாக விளங்கும் ஐயனார் ஆலயத்தின் அறங்காவலராகவும் சைவத்தொண்டு ஆற்றி வந்தவர்.நல்லதொரு குடும்பத்தலைவனை பிரிந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு மனக்கதவு ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறது!
அத்துடன் அன்னாரது ஆத்மா இறையடி நிழலில் சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக்கொள்வதுடன் எம் கண்ணீர் அஞ்சலிகளையும் காணிக்கையாக்கி நிற்கின்றோம்!

புதன், அக்டோபர் 03, 2012

மரண அறிவித்தல்!திரு,துரையப்பா சிவஞானச்செல்வம்(புளியங்கூடல்)

திரு துரையப்பா சிவஞானச்செல்வம் (ஊர்காவற்துறை புளியங்கூடல் செருத்தனைபதி ஸ்ரீ இராஜ மகாமாரி அம்மன் தேவஸ்தான அறங்காவலர்) தோற்றம் : 6 மே 1945
மறைவு : 2 ஒக்ரோபர் 2012
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா சிவஞானச்செல்வம் அவர்கள் 02-10-2012 செவ்வாய்க்கிழமை அன்று அம்பிகையின் திருவடி சரண் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா(ஸ்ரீ இராஜ மகாமாரி அம்மன் தேவஸ்தான முன்னாள் ஆதினகர்த்தா) , நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி, காலஞ்சென்ற அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குணசுந்தரி அவர்களின் பாசமிகு கணவரும்,
செந்தூரன், மருதூரன்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற ஞானேஸ்வரி, காலஞ்சென்ற திருஞானச்செல்வம், மற்றும் புவனேஸ்வரி, கமலாம்பிகை(கமலா), ஜெகதீஸ்வரி(ஜெகா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற இரத்தினம்(NR Transport), காலஞ்சென்ற திருகுலசிங்கம், மற்றும் கோபாலபிள்ளை, ஆறுமுகம்(சிவலிங்கம்), மகாலிங்கம், விஜயலட்சுமி(ராசம்), மகாதேவா(தேவர்), பரம்சோதி(சோதி), சூரியகலா(சூரி) ,சந்திரகலா(சந்திரா), ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 05-10-2012 வெள்ளிக்கிழமை பிற்பகல் 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் நொச்சிபதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் தவா(கனடா)
தொடர்புகளுக்கு செந்தூரன்(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94777322488 மருதூரன்(மகன் - அவுஸ்திரேலியா) — இலங்கை செல்லிடப்பேசி: +94777569325 தவா(மருமகன்) — கனடா தொலைபேசி: +14162936157
ராசா(மருமகன்) — கனடா தொலைபேசி: +17789949671
கெங்கா(மருமகள்) — பிரான்ஸ் தொலைபேசி: +33140860586