ஞாயிறு, பிப்ரவரி 13, 2011

மறக்க முடியாத நண்பி!

இப்போ நான் சொல்லப் போறதும் ஒரு நண்பியை பற்றியது,அவரது பெயர் சயிலா,மிகவும் நல்ல மனம் படைத்தவர்,என்னதான் சொன்னாலும் சிரித்துக் கொண்டே இருப்பார்.சோகம் என்னவென்றால் இள வயதிலேயே உலகை வெறுத்து சென்று விட்டார்.அவர் எனது ஞாபக பதிவேட்டில் எழுதிய வசனம் என்றைக்குமே என்னால் மறக்க முடியாது.அது என்னவெனில்,
பார்த்தால் பழகாதே,

பழகினால் பிரியாதே,

பிரிவது என்றால் வாழாதே,

வாழ்வது என்றால் சாகாதே,

செத்தாலும் மறக்காதே.

இந்த பொன் எழுத்துக்களை பதித்த இரண்டு,மூன்று மாதங்களிலேயே திடீர் சுகவீனம் ஏற்பட்டு அவர் யாவரையும் பிரிந்து விட்டார்.ஆனாலும் அவரது ஞாபகங்கள் என்றும் மனதில் நிலைத்திருக்கிறது.அவரின் ஞாபகங்களுடன் மனக்கதவு என்றும் திறந்திருக்கும்.(சயிலாவின் சொந்த இடம்:இருபாலை.)

வெள்ளி, பிப்ரவரி 11, 2011

தமிழன்!

தாயின்மேல் ஆணை! தந்தைமேல் ஆணை!
தமிழகமேல் ஆணை!
துாயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான் தோழரே உரைக்கின்றேன்;
நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டும்,
ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி
உழைத்திட நான் தவறேன்.
தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன்
தாய்தடுத் தாலும் விடேன்!
எமைநத்து வாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்!
தமக்கொரு தீமை. என்று நற்றமிழர்
எனைஅழைத்திடில் தாவி
இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான்
இனிதாம் என் ஆவி!
மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்த என் மற வேந்தர்
பூனைகள் அல்லர்; அவர்வழி வந்தோர்
புலிநிகர் தமிழ் மாந்தர்!
ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்
குவப்புடன் நான் சேர்ப்பேன்.