சனி, அக்டோபர் 15, 2016

மரண அறிவித்தல்!திரு,விஸ்வலிங்கம் விநாயகமூர்த்தி அவர்கள்(புளியங்கூடல்)

பரிவாக:29.05.1954-பிரிவாக:13.10.2016
யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த விஸ்வலிங்கம் விநாயகமூர்த்தி அவர்கள் 13-10-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற சண்முகம், நாயகம் தம்பதிகளின் மருமகனும், செல்வகுமாரி அவர்களின் அன்புக் கணவரும், நிருதரன், நிதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும், மருதடியான், கருநாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜிவிதா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை (16-10-2016) ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு அவரது திருவுடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி நிகழ்வுகள் இடம்பெறும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
பரமானந்தன் — இலங்கை
தொலைபேசி: +94770366331

வெள்ளி, அக்டோபர் 14, 2016

கண்ணீர் அஞ்சலிகள்!திரு,விஸ்வலிங்கம் விநாயகமூர்த்தி(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,விஸ்வலிங்கம் விநாயகமூர்த்தி அவர்கள்(13.10.2016)வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியுற்று துன்பம் அடைந்து நிற்கின்றோம்.
மூர்த்தி அண்ணா அவர்கள் மிகவும் எளிமையாக வாழ்ந்தவர்.வெள்ளை நிற ஆடைகளையே எப்பொழுதும் அவர் அணிந்திருப்பார்.அவரின் உள்ளமும் அப்படித்தான் பசுமையாகவே இருந்தது.அவரது பெற்றோர் கொண்டிருந்த எளிமை,பண்பு,கொடை என்பவற்றை மூர்த்தி அண்ணாவும் தாங்கியே நடந்தார்.அவரிடத்தில் கோபம் என்பதை காண முடியாது,அவரது புன்னகை வதனத்தை எப்பவுமே மறக்க முடியாது!
மூர்த்தி அண்ணாவின் இழப்பால் கண்ணீரில் உழலும் ஊர் உறவுகளுடன் புலம்பெயர்ந்து வாழும் நாமும் கண்ணீரை பகிர்ந்து கொள்கின்றோம்.
அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்!
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

வியாழன், அக்டோபர் 06, 2016

மரண அறிவித்தல்!திருமதி மங்கையற்கரசி பூலோகம்

வரவு:27-09-1933 விரைவு:02-10-2016
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி(சரசு) பூலோகம் அவர்கள் 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் அருமை மருமகளும், பூலோகம் அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீதரன்(சீராளன்- இலங்கை), ஜெயசீலன்(அறிவாளன்), அன்பழகி, தயாளன், அமுதா ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, வெற்றிவேலு, இலட்சுமி, மற்றும் விசுவலிங்கம், கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரேவதி, மலர்விழி(விஜி), கருணானந்தன், காலஞ்சென்ற ஸ்ரீவேணி, இராஜராஜன்(சோழன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், கண்மணி, பத்மாவதி, காலஞ்சென்ற இலட்சுமணப்பிள்ளை, கமலாதேவி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பொன்னுத்துரை, அன்னம்மா, சிவபாக்கியம், மற்றும் முருகேசபிள்ளை, பொன்னுச்சாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,திவாகரன், திபோதனன், கோவிதன், இந்துஜா, மீனுஜா, சுருதியா, துஷிதா, துலக்சன், கிருஷன், அபிரா, மிதுஷன், கவிநயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், ரணிஷா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்:
திகதி: சனிக்கிழமை 08/10/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/10/2016, 08:00 மு.ப — 10:00 மு.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/10/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம் திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/10/2016, 01:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு தயாளன்(மகன்) — கனடா தொலைபேசி: +14163212952 ஜெயசீலன்(மகன்) — கனடா தொலைபேசி: +16474066914
சீராளன்(மகன்) — இலங்கை தொலைபேசி: +94771726644
செல்லிடப்பேசி: +94750716886
இராஜராஜன்(மருமகன்) — கனடா செல்லிடப்பேசி: +14167266317 சிவசோதி(பெறாமகன்) — கனடா செல்லிடப்பேசி: +14168793767