சனி, டிசம்பர் 01, 2012

கண்ணீர் அஞ்சலி!அருளப்பு ரவீந்திரபாபு (நாரந்தனை)

நாரந்தனையை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்டு பின்னர் நுவரெலியாவிலும் தற்சமயம் லண்டனிலும் வாழ்ந்து வந்த அருளப்பு ரவீந்திரபாபு அவர்கள் 28-11-2012 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து துயருற்று நிற்கிறோம்.(மண்நோக்கி-04.08.1971 விண்நோக்கி -28.11.2012)
ரவீந்திரா!
வாழ்வை தொடங்கு முன்னமே-வாழ்வை
முடித்ததேனடா?
காலத்தின் கொடுமையது ஊர்
பிரிய வைத்ததடா!-ஆனாலும்
உன்னை நுவரெலியா
அனைத்ததடா!-அங்கே
நீ பெரியண்ணா குடும்பத்துடன்
வாழ்ந்து வந்த வேளையிலே
லண்டன் அழைத்ததடா!-இப்போ
அந்த லண்டனும் கசந்ததா உனக்கு?
உன்னை பெற்றெடுத்து சீராட்டி
வளர்த்தெடுத்த பெற்றோரின்
சொல்லுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்த
செல்லப் பிள்ளையடா நீ!-இன்று
அவர்தமை தேடியா
நீயும் விரைந்து விட்டாய்?
உன் பிரிவால் துயரடைந்து
நிற்கிறோமடா!
நீ எம்மை விட்டு மறைந்தாலும்-உன்
நினைவுகள் எம்முடனே
கலந்திருக்கும்.
கலங்கி தவிக்கும் உன் உறவுகளில்
ஒருவராக இருந்து
எம் கண்ணீர் அஞ்சலிகளை
உனக்கு காணிக்கையாக்குகின்றோம்.
உன் ஆத்மா இறையடி நிழலில்
சாந்தியடைய எல்லாம் வல்ல
இறையை பிரார்த்தித்து நிற்கின்றோம்.