ஞாயிறு, டிசம்பர் 16, 2018

மரண அறிவித்தல்!திரு,நல்லதம்பி முத்துக்கிருஷ்ணன்(புளியங்கூடல்)

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி முத்துகிருஸ்ணன் அவர்கள் 15-12-2018 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும், தயாளன்(கனடா), தயாளனி(ஆசிரியை- கொக்குவில் ஸ்ரீஇராமகிருஸ்ண வித்தியாசாலை), காலஞ்சென்ற குணாளன் மற்றும் குணாளனி, நல்வதனி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், தலைவர் நாகராசா அவர்களின் பாசமிகு சகோதரரும், நளாயினி(கனடா), சிவநாதன்(சிவன் கிறீம் கவுஸ்- திருநெல்வேலி), விஜயன் சிவபரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான இராசதுரை, ஜெகதாம்பிகை, குகராசன் ஆகியோரின் சிறிய தந்தையும், தேனுசா, அபிஷா, இராசேந்திரம், செல்வநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மகாராஜன், மனோகரி(கனடா), காலஞ்சென்ற கபிஷா, சாதனன், கீதப்பிரியா, விற்பரன், வித்தகன், அட்சயா, பிருந்தன், டனுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 17-12-2018 திங்கட்கிழமை அன்று மதியம் 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுருவில் புளியங்கூடல் இந்து பொது மயானத்திற்கு அன்னாரது திருவுடல் எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
மகள் யாழ்ப்பாணம்-+94774848874  

செவ்வாய், நவம்பர் 27, 2018

மரண அறிவித்தல்!திருமதி சுபத்திரை சுப்பிரமணியம்(புளியங்கூடல்)

ஊர்காவற்துறை புளியங்கூடல் சக்களாவைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுபத்திரை சுப்பிரமணியம் அவர்கள் 26-11-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான புளியங்கூடலைச் சேர்ந்த கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்துரை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(சின்னத்தம்பி)அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற இராசகுமாரி மற்றும் பாலேந்திரன், மகாலிங்கம்(மகேந்திரன்- கனடா), வசந்தகுமாரி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, கண்மணி, செல்லையா, சுப்பையா, கனகரட்ணம், நாகம்மா, பார்வதி, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், கந்தசாமி, பொன்னம்மா, வேலாயுதம், அன்னம்மா, இராசமணி, முருகேசு, அன்னம்மா, கனகேஸ்வரி, துரையப்பா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேவராசா, ஜெகதீஸ்வரி, தேவமனோகரி(ரோகினி- கனடா), சத்திதரன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லதா, லலிதா, சுதாகரன், காலஞ்சென்ற வசீகரன், பாஸ்கரன், சுபாஜினி, அனுராஜ்(கொழும்பு), துஸ்யந்தன்(கனடா), யோநதன்(கனடா), அருள்ராஜ்(சுவிஸ்), அருள் அமலா(இந்தியா), கீர்த்தனா(இந்தியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கவிராஜன், தனுசிகா, மயூரிகா, திபானி, நிரூபன், சாவித்திரி, ஓவியா, ஆருஷன், யதுசிகா, இனியா, யதீசன், குபேரா(கனடா), நிசோபிகா, கபிநயன், சஸ்ரிக், தேஸ்மிதா(இந்தியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரது இறுதி நிகழ்வுகள்(28-11-2018)புதன்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு அவரது புகழுடல் எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு

க. தேவராசா - மருமகன்
கைத்தொலைபேசி: +94764623543

சு. மகாலிங்கம்(மகேந்திரன்)
கைத்தொலைபேசி: +94771614255

வியாழன், அக்டோபர் 25, 2018

மரண அறிவித்தல்!திரு,அரசரெத்தினம் பற்குணராசா(புளியங்கூடல்)

புளியங்கூடல் தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,அரசரெத்தினம் பற்குணராசா(பக்கு) அவர்கள் இன்று வியாழக்கிழமை (25.10.2018) அகாலமரணமானார் என்பதை மிகுந்த துயரோடு அனைவருக்கும் அறியத்  தருகின்றோம்.அன்னார் காலம் சென்றவர்களான அரசரெத்தினம் பொன்னம்மா மண இணையரின் புதல்வரும்,காலம் சென்ற சோமசுந்தரம்(காத்தி) மகேஸ்வரி மண இணையரின் மருமகனும்,
வாசுகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ராகுல்,ராகவி,ராஜிதா,ராகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலம் சென்ற சந்திரராசா,ஆனந்தராசா,
சண்முகமணி,தயானந்தன்,யோகானந்தன்,
காலம் சென்ற வித்தியா ஆகியோரின் நேசமிகு சகோதரரும்,

காலம் சென்ற மனோ,ரஞ்சிதன்,வடிவேல்,
கிருஷ்ணதாஸ்,விவேகானந்தன்,
காலம் சென்ற கலைச்செல்வி ஆகியோரின் மைத்துனரும்,

இந்துசனின் மாமனாரும் ஆவார்.

அன்னாரது இறுதி நிகழ்வுகள் நாளை காலை 10:00 மணியளவில் புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று புளியங்கூடல் சுருவில் இந்து பொது
மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலைஉற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

திங்கள், அக்டோபர் 22, 2018

கண்ணீர் அஞ்சலி!திரு,கந்தசாமி நிமலன்(புளியங்கூடல்)

புளியங்கூடலை சேர்ந்த திரு,கந்தசாமி நிமலன் அவர்கள் காலமானார் என்பதறிந்து மிகவும் துயருற்று நிற்கின்றோம்.ஆசிரியர்களான கந்தசாமி செல்வநாயகி மண இணையரின் புதல்வனாக வந்துதித்த நிமலன் அவர்கள் இளம் வயதிலேயே தனது பெற்றோர்,உடன்பிறப்புக்கள்,மனைவி,பிள்ளைகள்,நட்புக்கள்,
21.08.1978-19.10.2018
சுற்றத்தார் என அனைவரையும் பிரிந்திருப்பது மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.நடராஜா வித்தியாலயத்தில் நாம் மாணவர்களாக இருந்த காலத்தில் அன்பு,அரவணைப்பு,கண்டிப்பு என எமக்கெல்லாம் நல்ல குருவாக இருந்த செல்வம் ரீச்சரின் குடும்பத்தில் இத்தகையதொரு இழப்பு வந்திருப்பது எல்லோருக்கும் பெரும் மன வேதனையை கொடுத்திருக்கிறது.இத்தருணத்தில் அவர்களது குடும்பத்தாருக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன் நிமலன் அவர்களது ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

வெள்ளி, செப்டம்பர் 14, 2018

கண்ணீர் அஞ்சலி!திரு,செல்லத்துரை ரவீந்திரன்(பெரியப்பன்-புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் 
கொண்டிருந்த திரு,செல்லத்துரை இரவீந்திரன் அவர்கள் இன்று(14.09.2018) காலமானார் என்பதறிந்து 
மிகவும் கவலைகொண்டு நிற்கின்றோம்.
அவரோடும் அவர்தம் குடும்பத்தோடும் பழகிய காலங்கள் 
மறக்க முடியாதவை,பழகுவதற்கு இனிய பண்பாளர்,
அளவோடு பேசும் சுபாவம் கொண்டவர்.
இளமைக்கால நினைவுகளில் எங்களுக்கு 
மூத்தவராக அவரின் ஞாபகங்கள் இன்னும் பசுமையாக தெரிகின்றது.அவரது இழப்புச் செய்தி எமக்கு பெரும் துயரை ஏற்படுத்தியிருக்கிறது.அன்னாரது பிரிவால் துயருற்று இருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் எம் கனத்த இதயத்துடன் ஆறுதல்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

வெள்ளி, செப்டம்பர் 07, 2018

மரண அறிவித்தல்!திருமதி மகேஸ்வரி நவரத்தினம்(புளியங்கூடல்)

உறவாக:14.06.1948-உயிராக:06.09.2018
புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி(சின்னக்கிளி)நவரத்தினம் அவர்கள் 06-09-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானார்.அன்னார் காலம் சென்றவர்களான சதாசிவம் பராசக்தி மண இணையரின் அன்பு மகளும் காலம் சென்றவர்களான கனகசபை சிவபாக்கியம் மண இணையரின் மருமகளும்
நவரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும் நாகேஸ்வரி,மகேந்திரன்,ஆறுமுகராசா,கெங்காதேவி,ஆகியோரின் அன்பு சகோதரியும்
மாரிமுத்து, சரோஜினி, இந்திரா,சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்
கலாநிதி, ரவீந்திரன்(கல்மடு), ரவிச்சந்திரன்(S.J. மோட்டார்ஸ், யாழ்ப்பாணம்)குமுதினி(சுவிஸ்)மாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும் குகநேசன்(விஜிதா கபே யாழ்ப்பாணம்)லலிதறஞ்சனி,நந்தினி,சிவலிங்கநாதன்(சுவிஸ்)
கோகுலநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்
ஜீவிதன்,கஜீவன்,கஷானி,யதுஷன்,டினோஷா, கிர்ஷானி,உஷாந்தன்,கபிஷன்,சேயோன்(சுவிஸ்),திவ்யா,சோபிகா ஆகியோரின் பேத்தியுமாவர்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
இலங்கை- 0094771711819
0094779955919 

வியாழன், ஆகஸ்ட் 16, 2018

மரண அறிவித்தல்!திருவாளர் வேலுப்பிள்ளை நாகலிங்கம்(புளியங்கூடல்)


புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரான திருவாளர்,வேலுப்பிள்ளை நாகலிங்கம் அவர்கள் புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை கண்மணி மண இணையரின் பாசமிகு புதல்வரும்,
காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து மண இணையரின் பேரன்பு மிக்க மருமகனும்,காலம் சென்ற சொர்ணம்மா
மற்றும் சந்திரா ஆகியோரின் ஆருயிர்க் கணவரும்,
காலம் சென்றவர்களான தங்கம்,அன்னக்குட்டி
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலம் சென்றவர்களான அன்னபூரணம்,சோமசுந்தரம்(கார்த்தி)குலசிங்கம்,
பொன்னம்மா(சின்னக்கா)
கோணேஸ்வரி(கிளி)மற்றும் நகுலாம்பிகை(பிள்ளையம்மா)தேவராணி(ராணி)
கந்தலிங்கம்,
சிவநாதன்,செல்வநாயகி(செல்வம்)ஜானகி(குஞ்சு)
ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் நாளை (17.08.2018) காலை 10:00 மணியளவில் புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அவரது புகழுடல் புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

திங்கள், ஜூலை 09, 2018

கண்ணீர் அஞ்சலி!திருமதி,பரமேஸ்வரி(கனகம்மா)சண்முகநாதன்(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் கொழும்பு கொட்டாஞ்சேனையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பரமேஸ்வரி(கனகம்மா)சண்முகநாதன் அவர்கள்(08.07.2018)நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் மனமுடைந்து நிற்கின்றோம்.சிறந்த பண்போடு வாழ்ந்தவர்கள்,எல்லாப் பிள்ளைகளையும் தமது பிள்ளைகள்போல் அன்போடு அரவணைக்கும் தாயாக விளங்கியவர்கள்,அப்பு என்று அழைக்கும் அந்த குரலோசை இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.இந்த பாசத்தாயது இழப்புச் செய்தி பொய்யாக இருக்காதோ என மனம் தவிக்கிறது.அன்னையின் இழப்பால் துடித்திருக்கும் அவரது குடும்பத்தை சார்ந்த அனைவருக்கும் ஆறுதல்களை தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா நித்தியக்  கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

செவ்வாய், ஜூலை 03, 2018

மரண அறிவித்தல்!திரு கதிரவேலு தர்மராஜா[மகேந்திரன்-புளியங்கூடல்]

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராஜா கதிரவேலு அவர்கள் 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கீதாஞ்சலி, கயேந்திரன், கயரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண் கதிரவேலு(கனடா), செல்வநாயகி(இலங்கை), காலஞ்சென்ற சொர்ணகாந்தி, கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவநீதன் , சர்மிளா, கஸ்தூரி ஆகியோரின் அன்பு மாமனாரும், 

கந்தசாமி(இலங்கை), காலஞ்சென்ற வடிவேலு, இரகுபதி(இலங்கை), நிர்மலாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

பவளராணி(இலங்கை), கோமதியம்மாள்(கனடா), சண்முகராஜா(ஜெர்மனி), குலேந்திரன்(கனடா), லோகநாதன்(டென்மார்க்), விஜயராஜா(சுவிஸ்), விஜயரெட்ணம்(பிரித்தானியா), கிருபாகரன்(பிரித்தானியா), சிறிஸ்கந்தராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிலன், நிவேன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நிகழ்வுகள்:
பார்வைக்கு திகதி:
சனிக்கிழமை 07/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப

முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc., 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

பார்வைக்கு திகதி:
ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc., 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

கிரியை திகதி:
ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 10:30 மு.ப
முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc., 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
சண்முகராஜா(சண்- சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +14168760923
கயேந்திரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +19057817041
கயரூபன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14165259997
செல்வநாயகி(சகோதரி) — இலங்கை
தொலைபேசி: +94212226763
கமலாதேவி(சகோதரி) — இலங்கை
தொலைபேசி: +94242227082
குலேந்திரன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +19057034408
இராஜேஸ்வரி(மனைவி) — கனடா
தொலைபேசி: +19059132184

அன்னாரது  குடும்பத்தாருக்கு எமது ஆறுதல்களை  தெரிவிப்பதுடன் அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகளையும் புளியங்கூடல்.கொம் குழுமம் காணிக்கையாக்குகிறது.

புதன், ஜூன் 06, 2018

மரண அறிவித்தல்!திருமதி மனோன்மணி கந்தையா(புளியங்கூடல்)

தாய்மடி:21.10.1940 இறையடி:05.06.2018
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி கந்தையா அவர்கள் 05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா கண்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும், சிவநேசன், சிவமதி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற நவரத்தினம் மற்றும் திலகவதி(வவா), சரஸ்வதி(தேவி), காலஞ்சென்ற சோதிநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தயாபரி, பத்மநாதன்(ஆசிரியர் புனித சார்ல்ஸ் மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், நிருத்தன், சுரபி, விதுஷா(சித்த மருத்துவபீட மாணவி- கிழக்கு பல்கலைக்கழகம்), துஷாபன்(தொழில்நுட்பபீட மாணவன்- மொறட்டுவை பல்கலைக்கழகம்), லோகிதா, லோகிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2018 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


தொடர்புகளுக்கு:
இலங்கை
செல்லிடப்பேசி: +94775343656

அன்னாரின் ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுவதுடன் அவர்தம் குடும்பத்தாருக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் சார்பில் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெள்ளி, மே 25, 2018

கண்ணீர் அஞ்சலி!திருமதி சின்னப்பிள்ளை சோமசுந்தரம்(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி சின்னப்பிள்ளை சோமசுந்தரம் அவர்கள்(23.05.2018)புதன்கிழமையன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயர்கொண்டு நிற்கின்றோம்.ஊருக்குள் தங்களுக்கென சுய கெளரவத்தை கொண்டவர்களாகவும் சைவசமயத்தின் மீது அதீத பற்றுக் கொண்டவர்களாகவும் விளங்கியதுடன் அய்யனார் ஆலயத்தை மிகவும் பக்தி சிரத்தையுடன் பரிபாலித்தும் வந்தவர்கள்.அன்னை திருமதி சின்னப்பிள்ளை சோமசுந்தரம் அவர்களின் இழப்பு அவர்களின் குடும்பத்திற்கு மட்டுமல்லாது சைவத்திற்கும் ஊர் மக்களுக்கும் கூட பேரிழப்பாகவே அமைந்து விட்டது.அன்னையின் இழப்பால் வாடி நிற்கும் அவரது குடும்பத்தாருக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன்,அன்னையின் ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

புதன், மே 16, 2018

மரண அறிவித்தல்!திரு,சின்னையா நடராஜா(கனடா-புளியங்கூடல்)

உறவாக:20.03.1930 இறையாக:10.05.2018
புளியங்கூடல் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா நடராசா அவர்கள் 10-05-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராணி அம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ரவீந்திரன்(கனடா), ரஜிகலா(பிரித்தானியா), யோகேந்திரன்(பிரித்தானியா), ரஜனி( Doha கட்டார்), பாஸ்கரன்(ஐக்கிய அமெரிக்கா Florida) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜியகுமாரி(கனடா), கருணாகரன்(பிரித்தானியா), ராஜேஸ்வரி(பிரித்தானியா), அருள்ராஜ்(Doha கட்டார்), சர்மிளா(ஐக்கிய அமெரிக்கா Florida) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிதன், வைஷ்ணுவன், அபிரா, அபிசன், தஷன், ரிஷான், அஜித்தன், மிதூன், அஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலம்சென்றவர்களான குருசாமி(J.P), கண்ணம்மா, இரத்தினம்(ஆசிரியர்), நாகம்மா ஆகியோரின் அன்புச் ககோதரரும், 

அரசரெட்ணம்(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), சிற்றம்பலம்(பிரித்தானியா), மகாலிங்கம்(கனடா), கோணேசலிங்கம்(இலங்கை), இந்திரா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


பார்வைக்கு திகதி:
சனிக்கிழமை 19/05/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 

பார்வைக்கு திகதி:
ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை திகதி:
ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம் திகதி:
ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 11:30 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 

தொடர்புகளுக்கு:
ரவீந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +14168883524
ராணி — கனடா
செல்லிடப்பேசி: +14167542853
கோணேஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766385571
மகாலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +14167290955
சிற்றம்பலம் — பிரித்தானியா
தொலைபேசி: +442086956133
அரசரெட்ணம் — இலங்கை
தொலைபேசி: +94212221739

புதன், மே 02, 2018

மரண அறிவித்தல்!திரு,துரையப்பா குமாரதாசன்(குமார்)


ஏழாலை மேற்கு ஏழாலையை பிறப்பிடமாகவும் கோவில் வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,துரையப்பா குமாரதாசன் அவர்கள் (30.04.2018) திங்கள் அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.அன்னார் ஆனந்தகெளரி(உதவிக்கல்விப்பணிப்பாளர் தீவகம்)யின் அன்புக்கணவரும்,காலஞ்சென்றவர்களான துரையப்பா சரஸ்வதி மண இணையரின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் மகேஸ்வரி மண இணையரின் மருமகனும்,சிவநேசன்,குகதாசன்,திலகவதி(ஒய்வு பெற்ற ஆசிரியை)புனிதவதி ஆகியோரின் அன்புக்கினிய சகோதரரும்,கருணா(ஆசிரியை கார்மேல் பற்றிமா கல்லூரி கல்முனை)மாலா,செல்வரத்தினம்,ஜெயச்சந்திரன்,மங்கையற்கரசி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.


அன்னாரது இறுதி நிகழ்வுகள் இன்று(02.05.2018) காலை 10:00 மணியளவில் ஏழாலையில் உள்ள இல்லத்தில் நடைபெற்று சத்தியோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பதை அறியத்தருகின்றோம்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தொடர்புகளுக்கு:
மனைவி யாழ்ப்பாணம்-0094779364397

ஞாயிறு, ஏப்ரல் 22, 2018

கண்ணீர் அஞ்சலி!திருமதி,பாக்கியம் திருநாவுக்கரசு(நயினாதீவு-கொழும்பு)

நயினாதீவை சொந்த இடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மருத்துவரும் சட்டவாளருமான திருவாளர் தியாகர் திருநாவுக்கரசு அவர்களின் துணைவியார் பாக்கியம் திருநாவுக்கரசு அவர்கள் இன்றைய தினம்(22.04.2018)காலமானார் என்ற செய்தி மிகுந்த துயரை ஏற்படுத்தியது.அம்மாவின் கனிவான பேச்சும் அன்பான உபசரிப்பும் இன்றும் கண்களினுள் நிழலாடுகின்றது.ஊர் பேச்சு வழக்கும் எளிமையான வாழ்க்கை முறையும் என்னை வியக்க வைத்திருக்கிறது.ஒரு பண்பான குடும்பம் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் பாக்கியம் அம்மா அவர்கள்.அப்பு,ராசா என்று அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் மீண்டும் ஒரு முறை அப்படி அழைக்க மாட்டாரா என்று ஏங்கும் அளவிற்கு அம்மாவின் வார்த்தைகளில் அன்பு பொங்கும்.எமக்கு பாக்கியம் அம்மாவின் இழப்பு பேரிழப்பாகவே அமைந்திருக்கிறதென்றால் அவரது குடும்பத்தாருக்கு இது மாபெரும் இழப்பாகவே அமைந்திருக்கும் என்பது மிகவும் துயரான ஒன்றே.எல்லாவகைகளிலும் மருத்துவரும் சட்டவாளருமான ஐயாவிற்கு பக்க பலமாக இருந்து செயற்பட்டவர் பாக்கியம் அம்மா.இந்த இழப்பால் தவித்திருக்கும் ஐயாவிற்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எம் ஆறுதல்களை தெரிவிப்பதோடு அம்மாவின் ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற அவர்களின் குலதெய்வமாகிய நயினை நாகம்மையை பிரார்த்தித்துக்கொள்கின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

தொடர்புகளுக்கு:

கணவர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777588721

தியாகராஜன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447411443849

சிவநேசன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794853273

அலெக்ஸாண்டர் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917634614030

சுரேந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447975573148

சுபோதினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94772186665

செம்மனச்செல்வி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776736833

ஜீவமணி — டென்மார்க்
தொலைபேசி: +4528830893

புதன், ஏப்ரல் 04, 2018

நினைவுகளோடு கண்ணீர் அஞ்சலி!திரு,தம்பித்துரை பாலச்சந்திரன்(பாலு)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,தம்பித்துரை பாலச்சந்திரன்(பாலு)அவர்கள் நேற்றைய தினம் (03.04.2018)காலமானார் என்ற தகவல் அறிந்து மிகவும் கவலைகொண்டு நிற்கின்றோம்.அவரது சண்டிக்கட்டும்,கம்பீர நடையும்,சிரிக்காமல் பேசும் நகைச்சுவையும் இன்னும் அப்படியே கண்களினுள் தெரிகிறது.எல்லோருடனும் இயல்பாக பழகக்கூடியவர்,புளியங்கூடல் சந்தியில் கடை வைத்திருந்தவர்.மிக நல்ல மனிதராகவே வாழ்ந்து வந்தவர்.தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுக்கொண்டவராக முன்னைய காலங்களில் அவரை நாம் கண்டிருக்கின்றோம்.அவரின் இழப்பு என்பது மிகுந்த மன வேதனையை தந்திருக்கிறது.அன்னாரது இழப்பால் தவிக்கும் குடும்பத்தாருக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

சனி, மார்ச் 31, 2018

மரண அறிவித்தல்!திருமதி மதிவதனி நித்தியகுமார்[புளியங்கூடல்]

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், தாவடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த நித்தியகுமார் மதிவதனி அவர்கள்(30-03-2018) வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார் புளியங்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சதாசிவம் மண இணையரின் மகன் வழிப் பேத்தியும்,ஆறுமுகராஜா(சின்ராஜா) இந்திரா மண இணையரின் பாசமிகு மகளும், நித்தியகுமார் அவர்களின் ஆருயிர் மனைவியும், அட்சயன் அவர்களின் அன்புக்கினிய  தாயாரும்,மதிவண்ணன்(கனடா)மகிந்தன்(கனடா)மதன்(லண்டன்) ஆகியோரின் நேசமிகு
 சகோதரியும், விஷிகன்,கிரிஷிகன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
மதிவண்ணன் — கனடா
தொலைபேசி: +12899812720 

சதாசிவம் ஆறுமுகராஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94771715838

புதன், மார்ச் 28, 2018

மரண அறிவித்தல்!திரு,கோபாலபிள்ளை நாகேஸ்வரன்(நாரந்தனை)

உறவாக:04.02.1960-இறையாக:26.03.2018
நாரந்தனையை பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கோபாலபிள்ளை நாகேஸ்வரன்(முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு நிர்வாக உத்தியோகத்தர்,தம்பலகாமம் உதவி அரசாங்க அதிபர்,கரைச்சி பிரதேச செயலாளர்,தற்போதைய கண்டாவளை பிரதேச செயலாளர்)அவர்கள் (26.03.2018)திங்கட்கிழமையன்று காலமானார் என்பதை மிகுந்த துயரோடு அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற கோபாலபிள்ளை மற்றும் தில்லையம்மா மண இணையரின் அன்புப் புதல்வரும்,
சரவணபவன்(முன்னாள் தபாலதிபர் ராஜகிரிய)காலஞ்சென்ற விசாலாட்சி(முன்னாள் ஆசிரியை ராஜகிரிய-மற்றும் சின்னமடு வித்தியாலயம்)ஆகியோரின் மருமகனும்,
மலர்விழியின்(ஆசிரியை யாழ்,இந்துக்கல்லூரி)ஆருயிர்க் கணவரும்,இளம்பரிதியின்(யாழ்,இந்து ஆரம்ப பாடசாலை)பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற நிர்மலாதேவி,மற்றும் பரமேஸ்வரன்,செந்தமிழ்ச்செல்வி,சாந்தினி காலஞ்சென்ற மதியழகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மங்கை,இந்துமதி,விக்னேஸ்வரமூர்த்தி,காந்தரூபி(பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகம் கிளிநொச்சி)மற்றும் காலஞ்சென்ற விஜயன்,செல்வநாயகம் ஆகியோரின் மைத்துனரும்
வித்யா,வினோசன்,ராகவி ஆகியோரின் மாமாவும் 
கரிஷன்,சஞ்சியா,லக்ஸ்மன் ஆகியோரின் சித்தப்பாவும் 
சவிநாத்,யதுசாந்த்,நிரோஷ்,தனுஷ்,கரிஷ் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள்(29.03.2018)வியாழக்கிழமை காலை 8:00மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று 11:30 மணியளவில் அன்னாரது புகழுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பரந்தன் பொது நோக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு மீண்டும் கலாசாலை வீதியூடாக கோண்டாவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர்-009477640573
0094778286504

திங்கள், மார்ச் 19, 2018

மரண அறிவித்தல்!திருமதி தெய்வானைப்பிள்ளை முருகேசன்பிள்ளை[புளியங்கூடல்-கனடா]

மண்ணகம்-13.04.1933 விண்ணகம்-18.03.2018
யாழ். ஊர்காவற்றுறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா Kaduna State ஐ வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தெய்வானைப்பிள்ளை முருகேசபிள்ளை அவர்கள் 18-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், முருகேசபிள்ளை(Chartered accountant Srilanka & Nigeria) அவர்களின் அன்பு மனைவியும்,
மலர்விழி, அருள்மொழி, திருமொழி, வேல்விழி, இறைமொழி(Electron Auto- Montreal), நிறைமொழி(Montreal), கயல்விழி(பவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், பொன்னுத்துரை, கணபதிப்பிள்ளை, சிவசுப்பிரமணியம்(ஒளி, ஒலி அமைப்பாளர்), தம்பிஐயா(ஒளி, ஒலி அமைப்பாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகாதேவா, சுலோச்சனா, சசிரேகா, இரத்தினேஸ்வரன், சிவதர்ஷினி, பவானி, புவனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான இராசம்மா, இரத்தினம், பத்மாவதி, சுந்தரவல்லி, பொன்னுத்துரை, அன்னம்மா, பூலோகம், சிவபாக்கியம் மற்றும் அன்னலட்சுமி, பொன்னுச்சாமி(P.T Master) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சதீஸ்காந்- ஜனனி, லாவண்யா, கார்த்திகா- வாகீசன், ஆதவன், ஆரணி, ஆதவி, அனுராம், மயூரன், வாசுகி, தினேஷ், நரேன், கபிலன், பவித்திரன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நேசிகா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு திகதி: சனிக்கிழமை 24/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine, e, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/03/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine, e, Markham, ON L3R 5G1, Canada 

கிரியை திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/03/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911Chapel Ridge Funeral Home, 8911 தகனம்

திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/03/2018, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, N L

தொடர்புகளுக்கு:
மலர்விழி மகாதேவா — கனடா
தொலைபேசி: +14162868391
மலர்விழி மகாதேவா — இலங்கை
செல்லிடப்பேசி: +94763093846
அருள்மொழி — கனடா
செல்லிடப்பேசி: +14165085890
திருமொழி — கனடா
தொலைபேசி: +14162581918
வேல்விழி இரத்தினேஸ்வரன் — கனடா
செல்லிடப்பேசி: +19054712591
இறைமொழி — கனடா
தொலைபேசி: +15149691906
நிறைமொழி — கனடா
தொலைபேசி: +14389897952
கயல்விழி புவனேஸ்வரன் — கனடா
தொலைபேசி: +14164099947

செவ்வாய், ஜனவரி 09, 2018

மரண அறிவித்தல்!திரு,செல்லப்பா ரூபசிங்கம்(புளியங்கூடல்)

மலர்வு:28.05.1943-உதிர்வு:01.01.2018
புளியங்கூடலை பிறப்பிடமாகவும் சீ.சீ.ரி.எம் வீதி கொக்குவில் மேற்கு கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,செல்லப்பா ரூபசிங்கம் அவர்கள் 01.01.2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலம்சென்றவர்களான செல்லப்பா மனோன்மணி மண இணையரின் புதல்வரும்,கனகலிங்கம் பவளம்மா மண இணையரின் மருமகனும்,திலகவதியின் ஆருயிர்க்கணவரும்,அகல்யா(பிரான்ஸ்)அஜந்தா(நீர்கொழும்பு)
ஜனார்த்தனன்,கேசவன்,நதியா(பிரான்ஸ்)ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சந்திரகுமார்,ஜெயதாசன்,ஜீவகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,செந்தூரன்,தரணியன்,இனியா ஆகியோரின் பேரன்புமிக்க பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03.01.2018 புதன்கிழமை அன்று கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நடைபெற்றது என்பதை துயரோடு பகிர்ந்து கொள்கிறோம்.இதை உற்றார்,உறவினர்,நண்பர்கள்,அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.