செவ்வாய், ஜனவரி 09, 2018

மரண அறிவித்தல்!திரு,செல்லப்பா ரூபசிங்கம்(புளியங்கூடல்)

மலர்வு:28.05.1943-உதிர்வு:01.01.2018
புளியங்கூடலை பிறப்பிடமாகவும் சீ.சீ.ரி.எம் வீதி கொக்குவில் மேற்கு கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,செல்லப்பா ரூபசிங்கம் அவர்கள் 01.01.2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலம்சென்றவர்களான செல்லப்பா மனோன்மணி மண இணையரின் புதல்வரும்,கனகலிங்கம் பவளம்மா மண இணையரின் மருமகனும்,திலகவதியின் ஆருயிர்க்கணவரும்,அகல்யா(பிரான்ஸ்)அஜந்தா(நீர்கொழும்பு)
ஜனார்த்தனன்,கேசவன்,நதியா(பிரான்ஸ்)ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சந்திரகுமார்,ஜெயதாசன்,ஜீவகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,செந்தூரன்,தரணியன்,இனியா ஆகியோரின் பேரன்புமிக்க பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03.01.2018 புதன்கிழமை அன்று கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நடைபெற்றது என்பதை துயரோடு பகிர்ந்து கொள்கிறோம்.இதை உற்றார்,உறவினர்,நண்பர்கள்,அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.