சனி, ஜூன் 25, 2011

நினைவு சுமந்து தவிக்கிறோம்!

எமை சுமக்க:15.03.1927 நாம் துயர் சுமக்க:30.06.2009
புளியங்கூடல் ஊர்காவற்றுறையை சேர்ந்த
திருவாளர் கந்தையா பசுபதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

நெஞ்சம் பதறுது!ஈராண்டாக கண்கள் நீர் சொரியுது!
தந்தையே உங்கள் நினைவினில் நாளும்
கனவுகள் கொல்லுது!
எம்மை தோளில் போட்டு வளர்த்த எம் தந்தையே!
உங்களை தோள் சுமக்க முடியாத பாவிகளானோம்!
இறுதிக் கணத்திலும் எம் நினைவுடன்தான் நீங்கள்
கண் துயின்றிருப்பீர்கள் என்பது எமக்கு புரியும் தந்தையே!
எமக்கு நீங்கள் பாலூட்டி வளர்த்ததை விடவும்
பாசத்தை ஊட்டி வளர்த்ததுதான் அதிகம் தந்தையே!
அந்த கொடிய காலனால் உங்கள் உடலை எம்மிடத்திலிருந்து
பிரிக்க முடிந்ததே தவிர,உங்கள் உயிரும் நீங்கள்
ஊட்டிய பாசமும் என்றும் எங்களுடன்தான் பிணைந்திருக்கிறது!
இனி எத்தனை எத்தனை ஆண்டுகளாயினும்
தந்தையே நீங்கள் எம்முடன்தான் வாழ்வீர்கள்!
பாசமுடன்:மனைவி கனகம்மா.மற்றும் உங்கள் பிள்ளைகள்.
மருமக்கள்,பேரப்பிள்ளைகள்.
தொடர்புக்கு:பசுபதி ரவி
00492018462661