செவ்வாய், அக்டோபர் 29, 2013

கண்ணீர் அஞ்சலி!

நவிண்டில் நாவலர் மடத்தை பிறப்பிடமாகவும்,ஜெர்மன் எசன் நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,செல்லையா நடராஜா அவர்கள் 24.10.2013(வியாழக்கிழமை)அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருற்று நிற்கின்றோம்.
சிறந்த பண்பாளராகவும்,
பழகுதற்கு யாவருக்கும்
இனியவராகவும்.
கடமை,கண்ணியம்,
கட்டுப்பாடு என்ற கோட்பாட்டை
தனது தாரக மந்திரமாகவும் 
கொண்டு வாழ்ந்தவர்.
அன்னாரது இழப்பானது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது 
எசன் வாழ் மக்களுக்கும் 
பேரிழப்பாகவே அமைந்து விட்டது!

அவரது திடீர் இழப்பால்
துயர் சுமந்து நிற்கும் அவரது
குடும்பத்தினருக்கும்
உறவுகளுக்கும் எம் ஆறுதல்களை
                                                                         தெரிவித்துக்கொள்வதுடன்,அன்னாருக்கு எம் கண்ணீர்
அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.
                                                                      --------------------------
                                                                         எசன் வாழ் மக்கள்.