வெள்ளி, மே 25, 2018

கண்ணீர் அஞ்சலி!திருமதி சின்னப்பிள்ளை சோமசுந்தரம்(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி சின்னப்பிள்ளை சோமசுந்தரம் அவர்கள்(23.05.2018)புதன்கிழமையன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயர்கொண்டு நிற்கின்றோம்.ஊருக்குள் தங்களுக்கென சுய கெளரவத்தை கொண்டவர்களாகவும் சைவசமயத்தின் மீது அதீத பற்றுக் கொண்டவர்களாகவும் விளங்கியதுடன் அய்யனார் ஆலயத்தை மிகவும் பக்தி சிரத்தையுடன் பரிபாலித்தும் வந்தவர்கள்.அன்னை திருமதி சின்னப்பிள்ளை சோமசுந்தரம் அவர்களின் இழப்பு அவர்களின் குடும்பத்திற்கு மட்டுமல்லாது சைவத்திற்கும் ஊர் மக்களுக்கும் கூட பேரிழப்பாகவே அமைந்து விட்டது.அன்னையின் இழப்பால் வாடி நிற்கும் அவரது குடும்பத்தாருக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன்,அன்னையின் ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

புதன், மே 16, 2018

மரண அறிவித்தல்!திரு,சின்னையா நடராஜா(கனடா-புளியங்கூடல்)

உறவாக:20.03.1930 இறையாக:10.05.2018
புளியங்கூடல் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா நடராசா அவர்கள் 10-05-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராணி அம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ரவீந்திரன்(கனடா), ரஜிகலா(பிரித்தானியா), யோகேந்திரன்(பிரித்தானியா), ரஜனி( Doha கட்டார்), பாஸ்கரன்(ஐக்கிய அமெரிக்கா Florida) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜியகுமாரி(கனடா), கருணாகரன்(பிரித்தானியா), ராஜேஸ்வரி(பிரித்தானியா), அருள்ராஜ்(Doha கட்டார்), சர்மிளா(ஐக்கிய அமெரிக்கா Florida) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிதன், வைஷ்ணுவன், அபிரா, அபிசன், தஷன், ரிஷான், அஜித்தன், மிதூன், அஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலம்சென்றவர்களான குருசாமி(J.P), கண்ணம்மா, இரத்தினம்(ஆசிரியர்), நாகம்மா ஆகியோரின் அன்புச் ககோதரரும், 

அரசரெட்ணம்(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), சிற்றம்பலம்(பிரித்தானியா), மகாலிங்கம்(கனடா), கோணேசலிங்கம்(இலங்கை), இந்திரா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


பார்வைக்கு திகதி:
சனிக்கிழமை 19/05/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 

பார்வைக்கு திகதி:
ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை திகதி:
ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம் திகதி:
ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 11:30 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 

தொடர்புகளுக்கு:
ரவீந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +14168883524
ராணி — கனடா
செல்லிடப்பேசி: +14167542853
கோணேஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766385571
மகாலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +14167290955
சிற்றம்பலம் — பிரித்தானியா
தொலைபேசி: +442086956133
அரசரெட்ணம் — இலங்கை
தொலைபேசி: +94212221739

புதன், மே 02, 2018

மரண அறிவித்தல்!திரு,துரையப்பா குமாரதாசன்(குமார்)


ஏழாலை மேற்கு ஏழாலையை பிறப்பிடமாகவும் கோவில் வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,துரையப்பா குமாரதாசன் அவர்கள் (30.04.2018) திங்கள் அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.அன்னார் ஆனந்தகெளரி(உதவிக்கல்விப்பணிப்பாளர் தீவகம்)யின் அன்புக்கணவரும்,காலஞ்சென்றவர்களான துரையப்பா சரஸ்வதி மண இணையரின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் மகேஸ்வரி மண இணையரின் மருமகனும்,சிவநேசன்,குகதாசன்,திலகவதி(ஒய்வு பெற்ற ஆசிரியை)புனிதவதி ஆகியோரின் அன்புக்கினிய சகோதரரும்,கருணா(ஆசிரியை கார்மேல் பற்றிமா கல்லூரி கல்முனை)மாலா,செல்வரத்தினம்,ஜெயச்சந்திரன்,மங்கையற்கரசி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.


அன்னாரது இறுதி நிகழ்வுகள் இன்று(02.05.2018) காலை 10:00 மணியளவில் ஏழாலையில் உள்ள இல்லத்தில் நடைபெற்று சத்தியோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பதை அறியத்தருகின்றோம்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தொடர்புகளுக்கு:
மனைவி யாழ்ப்பாணம்-0094779364397