செவ்வாய், அக்டோபர் 27, 2020

அஞ்சலிக்கின்றோம்!திரு,கந்தர் நாகமுத்து அவர்கள்(நெடுந்தீவு)


நெடுந்தீவை[தொட்டாரம்] பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டிருந்த எங்கள் தந்தையின் ஒன்றுவிட்ட சகோதரரும் அம்மாவின் மைத்துனரும் ஆகிய எமது சித்தப்பா[குஞ்சியய்யா]கந்தர் நாகமுத்து அவர்கள் நேற்றைய தினம்(26.10.2020)காலமானார் என்பது அறிந்து கலங்கி நிற்கின்றோம்,உறவினர்களின் கொண்டாட்டம் என்றாலே,அந்தக் கொண்டாட்டத்தை கலகலப்பாக்குவதில் அவர் எப்பவுமே முன்மாதிரியாக திகழ்ந்தவர்,தத்துவப் பாடல்களை நகைச்சுவையாகப் பாடுவார்,நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் என்ற பாடலை அவர் பாடியது எப்பவுமே என் மனதோடு நிற்கும்,அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தார்களுக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதோடு,அவருக்கு எமது அஞ்சலிகளை காணிக்கை ஆக்குகின்றோம்.அவர்தம் ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்,ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!