வெள்ளி, செப்டம்பர் 14, 2018

கண்ணீர் அஞ்சலி!திரு,செல்லத்துரை ரவீந்திரன்(பெரியப்பன்-புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் 
கொண்டிருந்த திரு,செல்லத்துரை இரவீந்திரன் அவர்கள் இன்று(14.09.2018) காலமானார் என்பதறிந்து 
மிகவும் கவலைகொண்டு நிற்கின்றோம்.
அவரோடும் அவர்தம் குடும்பத்தோடும் பழகிய காலங்கள் 
மறக்க முடியாதவை,பழகுவதற்கு இனிய பண்பாளர்,
அளவோடு பேசும் சுபாவம் கொண்டவர்.
இளமைக்கால நினைவுகளில் எங்களுக்கு 
மூத்தவராக அவரின் ஞாபகங்கள் இன்னும் பசுமையாக தெரிகின்றது.அவரது இழப்புச் செய்தி எமக்கு பெரும் துயரை ஏற்படுத்தியிருக்கிறது.அன்னாரது பிரிவால் துயருற்று இருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் எம் கனத்த இதயத்துடன் ஆறுதல்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

வெள்ளி, செப்டம்பர் 07, 2018

மரண அறிவித்தல்!திருமதி மகேஸ்வரி நவரத்தினம்(புளியங்கூடல்)

உறவாக:14.06.1948-உயிராக:06.09.2018
புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி(சின்னக்கிளி)நவரத்தினம் அவர்கள் 06-09-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானார்.அன்னார் காலம் சென்றவர்களான சதாசிவம் பராசக்தி மண இணையரின் அன்பு மகளும் காலம் சென்றவர்களான கனகசபை சிவபாக்கியம் மண இணையரின் மருமகளும்
நவரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும் நாகேஸ்வரி,மகேந்திரன்,ஆறுமுகராசா,கெங்காதேவி,ஆகியோரின் அன்பு சகோதரியும்
மாரிமுத்து, சரோஜினி, இந்திரா,சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்
கலாநிதி, ரவீந்திரன்(கல்மடு), ரவிச்சந்திரன்(S.J. மோட்டார்ஸ், யாழ்ப்பாணம்)குமுதினி(சுவிஸ்)மாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும் குகநேசன்(விஜிதா கபே யாழ்ப்பாணம்)லலிதறஞ்சனி,நந்தினி,சிவலிங்கநாதன்(சுவிஸ்)
கோகுலநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்
ஜீவிதன்,கஜீவன்,கஷானி,யதுஷன்,டினோஷா, கிர்ஷானி,உஷாந்தன்,கபிஷன்,சேயோன்(சுவிஸ்),திவ்யா,சோபிகா ஆகியோரின் பேத்தியுமாவர்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
இலங்கை- 0094771711819
0094779955919