ஞாயிறு, மார்ச் 12, 2017

மரண அறிவித்தல்!திருமதி சர்மிளா விஜயரூபன்(கனடா-புளியங்கூடல்)

உறவாக:20-03-1980-இறையாக:10-03-2017
புளியங்கூடல் தெற்கை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி சர்மிளா விஜயரூபன் அவர்கள் 10.03.2017 அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.அன்னார் கந்தலிங்கம் விஜயரூபனின் அன்பு மனைவியும் ஆரணனன்,ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலம் சென்ற தெய்வேந்திரம் மற்றும் செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,கந்தலிங்கம் யோகேஸ்வரி தம்பதிகளின் பேரன்புமிக்க மருமகளும்,சாருலதா,சாந்தகுமார்,சசிகலா,யோகேஸ்வரி,
கிருபாளிணி ஆகியோரின் நேசமிகு சகோதரியும்,காந்தரூபன்,சிவரூபன்,காலம் சென்ற கேமா,மற்றும் ஞானேந்திரன்,மனோகரன்,சத்தீஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அன்னாரது இறுதிக்கிரிகைகள் 13.03.2017 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00மணியளவில் புளியங்கூடல் மேற்கில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர் 
புளியங்கூடல் மேற்கு 
ஊர்காவற்றுறை.

வெள்ளி, மார்ச் 10, 2017

கண்ணீரோடு அஞ்சலிக்கின்றோம்!திருமதி சர்மிளா விஜயரூபன்(கனடா-புளியங்கூடல்)


புளியங்கூடலை பிறப்பிடமாக கொண்டிருந்தவரும் தற்சமயம் கனடாவில் வாழ்ந்து வந்தவருமான திருமதி சர்மிளா விஜயரூபன் அவர்கள் ஊர் சென்றிருந்த வேளை விபத்தொன்றில் படுகாயமடைந்த நிலையில் காலமானார் என்ற செய்தி அறிந்து(10-03-2017)மிகவும் துயரடைந்து கண்ணீர் மல்கி நிற்கின்றோம்!இந்த இழப்பென்பது பல சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கி இவரால் ஓரளவு ஆறுதலை பெற்றிருந்த இவரது குடும்பத்தினருக்கு பெரும் பேரிடியாகவே விழுந்திருக்கிறது.கணவர்,இரு பிள்ளைகள்,தாயார்,என யாவரையும் விட்டுப் பிரிந்த செய்தியானது புளியங்கூடல் மட்டுமல்லாது அயல் ஊர்களையும் புலம்பெயர் தேசத்து ஊர் உறவுகளையும்,அவரது நட்பு வட்டங்கள்  மத்தியிலும் பெரும் சோகத்தை உண்டுபண்ணியிருக்கிறது.இவரது இழப்பை எவராலும் சமப்படுத்த முடியாது.அவரது குடும்பம் ஆறுதலடைய இறை அருள் வேண்டுவதுடன்,அன்னாரது ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எம் கண்ணீர் பூக்களை காணிக்கை ஆக்குகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!