புதன், ஜூன் 06, 2018

மரண அறிவித்தல்!திருமதி மனோன்மணி கந்தையா(புளியங்கூடல்)

தாய்மடி:21.10.1940 இறையடி:05.06.2018
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி கந்தையா அவர்கள் 05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா கண்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும், சிவநேசன், சிவமதி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற நவரத்தினம் மற்றும் திலகவதி(வவா), சரஸ்வதி(தேவி), காலஞ்சென்ற சோதிநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தயாபரி, பத்மநாதன்(ஆசிரியர் புனித சார்ல்ஸ் மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், நிருத்தன், சுரபி, விதுஷா(சித்த மருத்துவபீட மாணவி- கிழக்கு பல்கலைக்கழகம்), துஷாபன்(தொழில்நுட்பபீட மாணவன்- மொறட்டுவை பல்கலைக்கழகம்), லோகிதா, லோகிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2018 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


தொடர்புகளுக்கு:
இலங்கை
செல்லிடப்பேசி: +94775343656

அன்னாரின் ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுவதுடன் அவர்தம் குடும்பத்தாருக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் சார்பில் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.