ஞாயிறு, செப்டம்பர் 11, 2016

எம் இதய அஞ்சலிகள்!திரு,கதிர்காமர் சண்முகரத்தினம்

நெடுந்தீவில் பிறந்து வளர்ந்து நாரந்தனையை வாழ்விடமாகக் கொண்டு தற்காலிகமாக கச்சேரியடியில் வாழ்ந்து வந்த திரு,கதிர்காமர் சண்முகரத்தினம் அவர்கள் கடந்த 07-09-2016 அன்று எம்மிடையே இருந்து பிரிந்தார் என்ற செய்தி அறிந்து சொல்லொணா துயரடைந்து நிற்கின்றோம்.புன்னகையாலே அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டவராக,மென்மையாகப் பேசும் பண்பு கொண்டவராக,நிதானமான செயற்பாடு கொண்டவராக இம்மண்ணிலே வாழ்ந்தவர்.நல்லொழுக்கம் என்பதற்கு இவரையே ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளலாம்,அத்தகைய ஒரு நல்ல பொக்கிஷமாக வாழ்ந்தவர் எம் அன்புக்கினிய மாமனார் திரு,கதிர்காமர் சண்முகரத்தினம் அவர்கள்.அன்னாரது இழப்பால் துயர் கொண்டிருக்கும் அவரது குடும்பத்தார்க்கு எம் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்வதுடன்,அன்னாரது ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எம் இதய அஞ்சலிகளை காணிக்கை ஆக்கி நிற்கின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக