வெள்ளி, மே 25, 2018

கண்ணீர் அஞ்சலி!திருமதி சின்னப்பிள்ளை சோமசுந்தரம்(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி சின்னப்பிள்ளை சோமசுந்தரம் அவர்கள்(23.05.2018)புதன்கிழமையன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயர்கொண்டு நிற்கின்றோம்.ஊருக்குள் தங்களுக்கென சுய கெளரவத்தை கொண்டவர்களாகவும் சைவசமயத்தின் மீது அதீத பற்றுக் கொண்டவர்களாகவும் விளங்கியதுடன் அய்யனார் ஆலயத்தை மிகவும் பக்தி சிரத்தையுடன் பரிபாலித்தும் வந்தவர்கள்.அன்னை திருமதி சின்னப்பிள்ளை சோமசுந்தரம் அவர்களின் இழப்பு அவர்களின் குடும்பத்திற்கு மட்டுமல்லாது சைவத்திற்கும் ஊர் மக்களுக்கும் கூட பேரிழப்பாகவே அமைந்து விட்டது.அன்னையின் இழப்பால் வாடி நிற்கும் அவரது குடும்பத்தாருக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன்,அன்னையின் ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக