திங்கள், அக்டோபர் 22, 2018

கண்ணீர் அஞ்சலி!திரு,கந்தசாமி நிமலன்(புளியங்கூடல்)

புளியங்கூடலை சேர்ந்த திரு,கந்தசாமி நிமலன் அவர்கள் காலமானார் என்பதறிந்து மிகவும் துயருற்று நிற்கின்றோம்.ஆசிரியர்களான கந்தசாமி செல்வநாயகி மண இணையரின் புதல்வனாக வந்துதித்த நிமலன் அவர்கள் இளம் வயதிலேயே தனது பெற்றோர்,உடன்பிறப்புக்கள்,மனைவி,பிள்ளைகள்,நட்புக்கள்,
21.08.1978-19.10.2018
சுற்றத்தார் என அனைவரையும் பிரிந்திருப்பது மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.நடராஜா வித்தியாலயத்தில் நாம் மாணவர்களாக இருந்த காலத்தில் அன்பு,அரவணைப்பு,கண்டிப்பு என எமக்கெல்லாம் நல்ல குருவாக இருந்த செல்வம் ரீச்சரின் குடும்பத்தில் இத்தகையதொரு இழப்பு வந்திருப்பது எல்லோருக்கும் பெரும் மன வேதனையை கொடுத்திருக்கிறது.இத்தருணத்தில் அவர்களது குடும்பத்தாருக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன் நிமலன் அவர்களது ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக