திங்கள், நவம்பர் 23, 2020

மரண அறிவித்தல்!திருமதி பரமேஸ்வரி தில்லையம்பலம்(புளியங்கூடல்)

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பரமேஸ்வரி தில்லையம்பலம் அவர்கள் 23-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு நாகமுத்து மண இணையரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஆச்சிமுத்து மண இணையரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற திரு,கணபதிப்பிள்ளை தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும், விஜயலட்சுமி, நித்தியலட்சுமி, தர்மதேவி, காலஞ்சென்ற நிர்மலா, வைத்தியநாதன், பாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், முருகானந்தம், லதா, சியாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள்  24-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுருவில்-புளியங்கூடல் இந்து மயானத்திற்கு அவரது புகழுடல் எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

தொடர்புகளுக்கு:

0094773950052 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக