திங்கள், மார்ச் 30, 2020

மரண அறிவித்தல்!திருமதி,திரேசா புஷ்பம் கந்தையா(நாரந்தனை)

மலர்வு:07.06.1944-உதிர்வு:30.03.2020
நாரந்தனையை சொந்த இடமாகவும் தற்சமயம் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தவருமான திருமதி,திரேஷா புஷ்பம்(வசந்தி)கந்தையா அவர்கள் இன்று (30.03.2020)திங்கட்கிழமை காலமானார்,அன்னார் காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை கிறிஸ்ரினா மண இணையரின் புதல்வியும் காலஞ்சென்றவர்களான சிதம்பரி அன்னம்மா மண இணையரின் மருமகளும் காலஞ்சென்ற சிதம்பரி கந்தையாவின்(சிறைச்சாலை உத்தியோகஸ்தர்)ஆருயிர்த் துணைவியும்,நிரஞ்சனா,யமுனா,அகல்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,குலதீபன்,கணேசலிங்கம்(ஊர்காவற்றுறை அரசினர் வைத்தியசாலை உத்தியோகஸ்தர்)ஆகியோரின் அன்பு மாமியாரும்,கஜலக்சன்,கஜரூபன்,கஜதீபன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,காலம்சென்றவர்களான மார்க்கிரேட்,அமிர்தநாதன் மற்றும் சாமிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலம்சென்றவர்களான தம்பையா(சுங்க இலாகா)திரேசம்மா,அருளப்பு(மதுவரி இலாகா)ரோசலின் ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும்,காலம்சென்ற செல்லம்மா மக்டலின் மற்றும் இராசமணி,புவனேஸ்வரி,திரேசம்மா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அன்னாரது இறுதி நிகழ்வுகள் நாளை காலை(31.03.2020)10:00 மணியளவில் நாரந்தனையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அவர்தம் புகழுடல் நாரந்தனை புனித சம்பேதுருவானவர் சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
நிரஞ்சனா-0033605805578
யமுனா-0094774319950

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக