புதன், மார்ச் 04, 2020

மரண அறிவித்தல்!திருமதி,மகாதேவி சோமசுந்தரம்(சரவணை-பிரான்ஸ்)

உறவாக:07.12.1948-இறையாக:02.03.2020
சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் மகாதேவி அவர்கள் 02-03-2020 திங்கட்கிழமை அன்று பிரான்சில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்தையா, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சோமசுந்தரம்(துரைராஜா) அவர்களின் அன்பு மனைவியும், ராஜ்குமார், நந்தினி, ராஜினி, சிவாஜினி, காலஞ்சென்ற சுபாஜினி, ஜேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும், நிர்மலாதேவி, தயாகரன், சந்திரகுமார், இதயகுமார், கரிஸ்மியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான கந்தையா, கோபாலபிள்ளை, பேரம்பலம், பூரணம், சுப்ரமணியம், குணமணி, சரஸ்வதி மற்றும் தர்மலிங்கம், செல்லத்துரை, சுந்தரம்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான கமலம், பராசக்தி, கனகரட்ணம், ஸ்ரீதேவி, கமலா, துரைமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், துஷான், றதோஸ், தஸ்மிதன், திக்‌ஷியா, நிக்‌ஷியா, கஸ்வியன், திஸ்விகா, சோபித், மானுஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.இறுதி நிகழ்வுகள் வியாழக்கிழமை(05.03.2020)பிரான்சில் இடம்பெறும்.

தகவல்:
ஐயம்பிள்ளை சுந்தரம்பிள்ளை
சகோதரர்
சுவிஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக