ஞாயிறு, மார்ச் 12, 2017

மரண அறிவித்தல்!திருமதி சர்மிளா விஜயரூபன்(கனடா-புளியங்கூடல்)

உறவாக:20-03-1980-இறையாக:10-03-2017
புளியங்கூடல் தெற்கை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி சர்மிளா விஜயரூபன் அவர்கள் 10.03.2017 அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.அன்னார் கந்தலிங்கம் விஜயரூபனின் அன்பு மனைவியும் ஆரணனன்,ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலம் சென்ற தெய்வேந்திரம் மற்றும் செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,கந்தலிங்கம் யோகேஸ்வரி தம்பதிகளின் பேரன்புமிக்க மருமகளும்,சாருலதா,சாந்தகுமார்,சசிகலா,யோகேஸ்வரி,
கிருபாளிணி ஆகியோரின் நேசமிகு சகோதரியும்,காந்தரூபன்,சிவரூபன்,காலம் சென்ற கேமா,மற்றும் ஞானேந்திரன்,மனோகரன்,சத்தீஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அன்னாரது இறுதிக்கிரிகைகள் 13.03.2017 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00மணியளவில் புளியங்கூடல் மேற்கில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர் 
புளியங்கூடல் மேற்கு 
ஊர்காவற்றுறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக