வெள்ளி, மார்ச் 10, 2017

கண்ணீரோடு அஞ்சலிக்கின்றோம்!திருமதி சர்மிளா விஜயரூபன்(கனடா-புளியங்கூடல்)


புளியங்கூடலை பிறப்பிடமாக கொண்டிருந்தவரும் தற்சமயம் கனடாவில் வாழ்ந்து வந்தவருமான திருமதி சர்மிளா விஜயரூபன் அவர்கள் ஊர் சென்றிருந்த வேளை விபத்தொன்றில் படுகாயமடைந்த நிலையில் காலமானார் என்ற செய்தி அறிந்து(10-03-2017)மிகவும் துயரடைந்து கண்ணீர் மல்கி நிற்கின்றோம்!இந்த இழப்பென்பது பல சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கி இவரால் ஓரளவு ஆறுதலை பெற்றிருந்த இவரது குடும்பத்தினருக்கு பெரும் பேரிடியாகவே விழுந்திருக்கிறது.கணவர்,இரு பிள்ளைகள்,தாயார்,என யாவரையும் விட்டுப் பிரிந்த செய்தியானது புளியங்கூடல் மட்டுமல்லாது அயல் ஊர்களையும் புலம்பெயர் தேசத்து ஊர் உறவுகளையும்,அவரது நட்பு வட்டங்கள்  மத்தியிலும் பெரும் சோகத்தை உண்டுபண்ணியிருக்கிறது.இவரது இழப்பை எவராலும் சமப்படுத்த முடியாது.அவரது குடும்பம் ஆறுதலடைய இறை அருள் வேண்டுவதுடன்,அன்னாரது ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எம் கண்ணீர் பூக்களை காணிக்கை ஆக்குகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக