வெள்ளி, செப்டம்பர் 14, 2018

கண்ணீர் அஞ்சலி!திரு,செல்லத்துரை ரவீந்திரன்(பெரியப்பன்-புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் 
கொண்டிருந்த திரு,செல்லத்துரை இரவீந்திரன் அவர்கள் இன்று(14.09.2018) காலமானார் என்பதறிந்து 
மிகவும் கவலைகொண்டு நிற்கின்றோம்.
அவரோடும் அவர்தம் குடும்பத்தோடும் பழகிய காலங்கள் 
மறக்க முடியாதவை,பழகுவதற்கு இனிய பண்பாளர்,
அளவோடு பேசும் சுபாவம் கொண்டவர்.
இளமைக்கால நினைவுகளில் எங்களுக்கு 
மூத்தவராக அவரின் ஞாபகங்கள் இன்னும் பசுமையாக தெரிகின்றது.அவரது இழப்புச் செய்தி எமக்கு பெரும் துயரை ஏற்படுத்தியிருக்கிறது.அன்னாரது பிரிவால் துயருற்று இருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் எம் கனத்த இதயத்துடன் ஆறுதல்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக