மிகவும் மதிற்பிற்குரிய திரு நல்லையா பரம்சோதி அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியை காண்டீபன் பரம்சோதி அவர்களின் முகநூல் மூலமாக அறிந்து மிகவும் துயரடைந்தோம்,நல்ல அன்பும்,பண்பும்,ஆதரவும் மிக்க குடும்பத்தில் பிறந்தவர் இவர்.தமது பெற்றோரின் அத்தனை நற்பண்புகளையும் கொண்டவராக,அமைதியான சுபாவம் கொண்டவராகவும் வாழ்ந்தவர் இவர்.அன்னாரின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கு மிகப் பேரிழப்பு என்பதுடன் அவரது உறவுகள் ஊர் மக்கள் எல்லோருக்குமே மிகப்பெரும் இழப்பாகவே அமைந்து விட்டது.இவ்விழப்பால் துயர் சுமந்து நிற்கும் அவரது குடும்பத்தினர் உறவுகள் அனைவருக்கும் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குவதுடன் அவரது ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
அன்னாரின் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள் பார்த்தீபன், மகாதீபன் மற்றும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதர சகோதரிகள், உற்றார் உறவினர்கள் அனைவரிற்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
பதிலளிநீக்கு