ஞாயிறு, நவம்பர் 05, 2017

பிறேம் நினைவாக நெஞ்சத்து ஊற்று!

உடுவிலில் பிறந்து புளியங்கூடலில் மணம்முடித்து லண்டனில்(03.11.2017) ஆழ்துயில் கொண்ட திரு,துரைசிங்கம் பிறேமதாஸ் நினைவுகளால் வந்த நெஞ்சத்து ஊற்று.
ஏ...கொடூர மரணப்பேயே..!
உன்னிடத்தில் யாரும் தப்ப முடியாது 
என்பது தெரிந்ததுதான்..ஆனால் 
இன்னும் எங்கள் பிறேமை சில காலம் 
வாழ விட்டிருக்கலாமே நீ!
புன்னகையோடு வாழ்ந்த குடும்பத்தை 
கண்ணீரோடு கிடக்க வைத்து விட்டாயே 
மரணப்பேயே..!
குடும்பம்,சொந்தம்,பந்தம்,உறவு.
பாசம் என்பதெல்லாம் உனக்கு
தெரியாததுதான் 
அதனால்தான் நீ விரும்பிய நேரத்தில் 
யாரை வேண்டுமானாலும் 
எடுத்துக்கொள்கிறாய்......!
ஏ...கொடூர மரணப்பேயே...!
இனிமேலாவது இளம் குடும்பத்தை 
தவிக்க விட்டு வேடிக்கை பார்க்காதே
சின்னஞ் சிறு குழந்தைகளை 
அப்பா இல்லாமல் தேம்ப விடாதே!
வாழ்க்கை என்பதை தெரிந்துகொள்!
பாசம் என்பதை புரிந்துகொள்!
பிறேம் எனும் ஒரு இளம் குடும்பஸ்தனை 
பறித்து விட்ட கொடூரனே.....!
உன்னை நோவதை விட 
எமக்கு வேறு வழி தெரியவில்லை!
ஏ...கொடூர மரணப்பேயே...!
உனக்கு எல்லாம் வல்ல சக்தி இருந்தால் 
அந்த குடும்பத்திற்கு எதையும் தாங்கும் 
வல்லமையை கொடு!
உறுதியோடு மீண்டும் நிமிர்ந்து நிற்கும் 
திடத்தை கொடு!


திரு,துரைசிங்கம் பிறேமதாஸ் அவர்களுக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் அகவணக்கத்தை தெரிவித்து நிற்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக