ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

சிறந்த பண்பாளர் கார் மாமா!

புளியங்கூடலை சேர்ந்த நாகலிங்கம் சண்முகநாதன் அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியாதென்றே சொல்லலாம்.இவரை நாம் கார் மாமா என்றே அழைப்பது வழக்கம்.அநேகமானவர்கள் அப்படித்தான் அழைத்தார்கள்.எமது ஊரில் அதாவது புளியங்கூடலில் முன்பு வாகன வசதிகள் குறைவாகவே இருந்தது.(இப்போ எப்படி என்று தெரியவில்லை)ஆனால் எனக்கு தெரிந்த நாளிலிருந்து கார் மாமாவை காருடன்தான் பார்த்திருக்கிறேன்.எங்கள் ஊருக்கு அம்புலன்ஸ் இல்லாத குறையை போக்கியவர் கார் மாமா என்றுதான் நான் சொல்வேன்.எந்த வீட்டில் கூக்குரல் சத்தம் கேட்டாலும் எந்த சாமமாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உடனடியாக அங்கே சென்று பணத்தை பற்றியெல்லாம் யோசிக்காமல் நோயாளியை மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சேர்ப்பிப்பதுடன் வீட்டிற்கும் போய் தகவல் சொல்லி விட்டு செல்லும் சிறந்த பண்பாளர் கார் மாமா.உதவி புரிவதில் ஒரு கொடையாளனாகவே திகழ்ந்தவர்.எல்லோருடனும் மிகவும் பண்பாக பழகும் நற்குணமும் அவரிடம் இருந்த சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்.ஊரில் இருந்து இடம் பெயர்ந்து அவர் கொழும்பில் வசித்து வந்தார். நான் கொழும்பில் இருந்த நேரங்களில் அவர்களை போய் சந்திப்பது வழக்கம்.ஆனால் இன்று நம்மையெல்லாம் விட்டு அவர் வெகு தூரம் சென்று விட்டார் என்றபோதும்,அவரது நினைவுகளும் அவர் ஆற்றிய நன்மைகளும் என்றும் எம்முடன் கலந்திருக்கும் என்பதே உண்மை!அந்த வகையிலேதான் அவரது நீங்கா நினைவுகளை மனக்கதவூடாக புளியங்கூடல் மக்கள் சார்பில் கார் மாமாவிற்காக சமர்ப்பிர்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக