செவ்வாய், அக்டோபர் 30, 2012

கண்ணீர் அஞ்சலி!சோமசுந்தரம் தனராசன் (புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,சோமசுந்தரம் தனராசன் அவர்கள் 24.10.2012அன்று காலமானார் என்பதறிந்து மிகவும் துயர் சுமந்து நிற்கின்றோம்.
சைவ மரபில் வந்துதித்த திரு,தனராசன் அவர்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கையும்,தன்னலமற்ற குணாளரும்,அமைதியான சுபாவமும் கொண்டவர்.வேலணை பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கிளை முகாமையாளராகவும் பின்னர் ஊர்காவற்றுறை பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கிளை முகாமையாளராகவும் கடமையாற்றி வந்தவர்.
அத்தோடு நில்லாமல் விவசாய செய்கையையும் மேற்கொண்டு வந்த திரு,சோமசுந்தரம் தனராசன் அவர்கள் காவல் தெய்வமாக விளங்கும் ஐயனார் ஆலயத்தின் அறங்காவலராகவும் சைவத்தொண்டு ஆற்றி வந்தவர்.நல்லதொரு குடும்பத்தலைவனை பிரிந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு மனக்கதவு ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறது!
அத்துடன் அன்னாரது ஆத்மா இறையடி நிழலில் சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக்கொள்வதுடன் எம் கண்ணீர் அஞ்சலிகளையும் காணிக்கையாக்கி நிற்கின்றோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக