ஞாயிறு, ஜூன் 02, 2013

மரண அறிவித்தல்!திரு,சின்னத்தம்பி பாலசுப்பிரமணியம்(சிவசிவா)புளியங்கூடல்

பிறப்பு : 26.09.1923 — இறப்பு : 31.05.2013
நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வசிப்பிடமாகவும், கொழும்பில் தற்காலிகமாக வசித்து வந்தவருமாகிய சிவசிவா என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டவருமான சின்னத்தம்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 31-05-2013 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும், சண்முகராஜா(ஆசிரியர் கொழும்பு றோயல் கல்லூரி), பாலேந்திரன், உமாதேவி, மந்திரேஸ்வரன், சிவஞானேஸ்வரி, சோமாஸ்கந்தன், சிவகுருநாதன்(பொறியியலாளர்) ஆகியோரின் அன்புத் தந்தையும், சரஸ்வதி, தனலக்ஸ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜெயதேவி(ஆசிரியை பிறஸ்பெற்ரேரியன் மகளிர் பாடசாலை கொழும்பு 10), சிவமலர், நவநாதன், சிவானந்தன், சசிகலா, சுமதி(கணக்காளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம், சிவலிங்கம், குருசாமி, கண்ணம்மா, இரத்தினம்(ஆசிரியர்) மற்றும் நடராஜா ஆகியோரின் மைத்துனரும் ஜனுஸ்கா, விஸ்ணுகா, யாகுலன், தரணியா, றொசான், கஜதீபன், சர்விகா, சஜன், சௌமிகா, சாதுரியன், ஹரிஸ், இஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் திருவுடல் 01-06-2013 சனிக்கிழமை அன்று காலை 9:00 மணிமுதல் 5:00 மணி வரை பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 02-06-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3:00 மணிமுதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனக்கிரியைகள் மாலை 5:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
No:26, 2/1, 42ஆவது ஒழுங்கை
கொழும்பு 06

தொடர்புகளுக்கு:
சோமாஸ்கந்தன் — பிரான்ஸ் தொலைபேசி: +33146753225
செல்லிடப்பேசி: +33615624801
நவநாதன் — ஜெர்மனி தொலைபேசி: +49212331599
சிவாநந்தன் — ஜெர்மனி தொலைபேசி: +4921528096888
சிவகுருநாதன் — ஐக்கிய அமெரிக்கா தொலைபேசி: +16786242603 செல்லிடப்பேசி: +17703651931

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக