புதன், ஏப்ரல் 09, 2014

மரண அறிவித்தல்!திருமதி,பொன்னம்மா அரசரெத்தினம்(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி,பொன்னம்மா அரசரெத்தினம் அவர்கள் (08.04.2014)செவ்வாய்க்கிழமை அன்று புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,ராசா சிதம்பரம் தம்பதிகளின் நேசமிகு மருமகளும்,காலம்சென்ற திரு,ராசா அரசரெத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(கார்த்தி)அன்னபூரணம், சொர்ணாம்பிகை, குலசிங்கம், கோணேஸ்வரி மற்றும் நகுலாம்பிகை, கந்தலிங்கம், சிவநாதன், தேவராணி(சந்திரா) தருமராணி, செல்வநாயகி, ஜானகி ஆகியோரின் அன்புச்சகோதரியும்.திருமதி,பூமணி பொன்னம்பலம் அவர்களின் அன்பிற்குரிய மைத்துனியும்,சந்திரராசா,பற்குணராசா ஆனந்தராசா ,தயானந்தன், யோகானந்தன்,காலஞ்சென்ற சண்முகமணி(சண்முகா),காலம்சென்ற வித்தியா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள்  இன்று பிற்பகல்(09.04.2014)அன்னாரது இல்லத்தில் நடைபெற்று அவரது புகழுடல் சுருவில்-புளியங்கூடல் இந்து பொது மயானத்திற்கு  எடுத்துச் செல்லப்படும் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக