திங்கள், ஜூலை 09, 2018

கண்ணீர் அஞ்சலி!திருமதி,பரமேஸ்வரி(கனகம்மா)சண்முகநாதன்(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் கொழும்பு கொட்டாஞ்சேனையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பரமேஸ்வரி(கனகம்மா)சண்முகநாதன் அவர்கள்(08.07.2018)நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் மனமுடைந்து நிற்கின்றோம்.சிறந்த பண்போடு வாழ்ந்தவர்கள்,எல்லாப் பிள்ளைகளையும் தமது பிள்ளைகள்போல் அன்போடு அரவணைக்கும் தாயாக விளங்கியவர்கள்,அப்பு என்று அழைக்கும் அந்த குரலோசை இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.இந்த பாசத்தாயது இழப்புச் செய்தி பொய்யாக இருக்காதோ என மனம் தவிக்கிறது.அன்னையின் இழப்பால் துடித்திருக்கும் அவரது குடும்பத்தை சார்ந்த அனைவருக்கும் ஆறுதல்களை தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா நித்தியக்  கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக