வெள்ளி, நவம்பர் 11, 2011

மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி!

சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த திரு,நாகலிங்கம் அரியகுட்டி அவர்களின் மூன்றாமாண்டு(12-11-2008) நினைவுகள்! எம்மை பாசத்தோடும்,ஒழுக்கத்தோடும் வளர்த்தெடுத்த எங்கள் அன்புத்தந்தையே நாம் உங்களை பாசத்தோடு பார்க்க வேண்டிய நேரத்தில்

சொல்லாமல் கொள்ளாமல் காலன் என்ற பாவி உங்களை அழைத்துக்கொண்டானோ? இரவு உணவருந்தி விட்டு நித்திரைக்கு சென்ற நீங்கள் மீளாத்துயில் கொள்வீர்கள் என நாம் நம்பவில்லையே தந்தையே! மூன்றாண்டுகள் ஆகி விட்டபோதும் அந்த நினைவுகள் இன்றுபோல் சுடுகிறதே தந்தையே!

தினம் தினம் உங்கள் நினைவுகளை சுமந்து தவிக்கிறோம் தந்தையே!

என்றும் அழியா நினைவுகளுடன்

உங்கள் குடும்பத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக