ஊர்காவல்துறை புளியங்கூடல் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்
கொண்ட திருநாவுக்கரசு கண்ணம்மா அவர்கள் 08-05-2012 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி
சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்லையா, இலச்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தில்லையம்பலம், வள்ளியம்மை தம்பதியரின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு(ரத்தினம்) அவர்களின் பாசமிகு துணைவியும், சந்திரா, ஆனந்தரூபன்(ஆனந்தன்), இந்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற சிவபாக்கியம், காலஞ்சென்ற இராசரத்தினம், இராசலிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற பரமலிங்கம், பொன்னம்மா, வைத்திலிங்கம், அப்பாத்துரை, இராசையா(ஆசிரியர்), செல்லம்மா, திருநாவுக்கரசு(இரத்தினம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், சிவபாதம்(பாலு), பவானந்தராணி(மணி), வேல்வேந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும், இராசமலர்(ராசாத்தி), காலஞ்சென்ற அம்பிகைபாலன், புஷ்ப கலாராணி(கலா), வசந்தகுமாரி(வசந்தா), பவானந்த ராணி(மணி), மகேந்திரன், தமிழ்மாறன்(மாறன்), தமிழ்செல்வி(செல்வி), தமிழரசி(சுசி), தமிழினி(இனி), தமிழ் வேணி(வேணி)ஆகியோரின் பாசமிகு அத்தையும், சுபாகரன், பிரியதர்சினி, சிந்துஜா, சுபாசினி, சுசீபன், சுசீபா, வஜீரா, மயூரா, லோஜிதா, சஜீரா, அகலினி ஆகியோரின் அன்பு பேத்தியும், யதூசா, மகீசா ஆகியோரின் பாசம் நிறை பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-05-2012 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று புளியங்கூடல் நொச்சிப் பதிவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
மகேந்திரன்(மருகன் - ஜெர்மனி) (அன்னாருக்கு மனக்கதவு தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறது) |
தொடர்புகளுக்கு | ||||||
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக