முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் ஜெர்மனி எசனை வத்திவிடமாகவும் கொண்டிருந்த இராதாகிருஷ்ணன் அன்பழகன்(அன்பு)அவர்கள் 15.09.2012 சனிக்கிழமை அன்று காலமானார் என்பதறிந்து சொல்லொணா துயரடைந்தோம்!
(அன்னை மடியில்:09.05.1972 ஆண்டவன் அடியில்:15.09.2012)
அவருக்கு எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக
சமர்ப்பிக்கின்றோம்!
சமர்ப்பிக்கின்றோம்!
அன்பின் நண்பா!
குடும்பம்,நட்பு வட்டம் என எப்போதும்
ஒவ்வொரு நினைவுகளாய் பகிர்ந்து கொண்டிருப்பாய்!
தாயக நினைவுகளால் கண்ணீர் விட்டழுவாய்!
யார் தப்பு செய்தாலும் தட்டிக்கேட்க வேண்டுமென
வாளெடுத்து வீரநடை போட்டவன் நீ!
அஞ்சா நெஞ்சனாக வாழ்ந்தவன் நீ!
இன்று ஏன்தான் மெளனித்தாய்?
எமை விட்டு பயணித்தாய்?
யார் யாருக்கெல்லாமோ கவிதை
எழுதி தரச்சொல்வாய்,
இன்று உனக்கே கவிதை
எழுத வைத்து விட்டாயே!
நண்பா!இனி என்றுதான் காண்போம் உன்னை?!
அன்பின் நண்பா!
எப்படி உனக்கு இப்படி ஒரு மனசு வந்தது?
உன் மனைவி கதறும் ஒலி
உனக்கு கேட்கவில்லையா?
உன் செல்ல மகன் உன்னை தேடுவது
உனக்கு தெரியவில்லையா?
உன் பாசமிகு பெற்றோர் வன்னி மண்ணில்
ஒப்பாரியிட்டு புலம்புவது
உனக்கு புரியவில்லையா?
உன் சகோதரரின் கூக்குரலோசை
உனக்கு விளங்கவில்லையா?
உன் நண்பர்களின் பரிதவிப்பு
உனக்கு புரியவில்லையா?
உன் உறவுகள் கூடி மாரடிப்பது
உனக்கு தெரியவில்லையா?
அன்பின் நண்பா!
எப்படி உனக்கு இப்படி ஒரு மனசு வந்தது?
அன்பின் நண்பனே!நீ எம்மை விட்டு பிரிந்தாலும்
உன் நினைவுகள் எம்முடனேயே வாழும்!
உனக்கு எம் கண்ணீர்
உன் நினைவுகள் எம்முடனேயே வாழும்!
உனக்கு எம் கண்ணீர்
துளிகளை காணிக்கையாக்குகின்றோம்!
உன் ஆத்மா இறையடி நிழலில் சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
நிகழ்வுகள் | ||||||
|
தொடர்புகளுக்கு | ||||||||||||
துயருடன்! |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக