வியாழன், செப்டம்பர் 27, 2012

கண்ணீர் பூக்கள் சொரிகின்றோம்!

எமை விட்டு உடலால் பிரிந்தாலும் உள்ளத்தில் நிலைத்து வாழும் இராதாகிருஷ்ணன் அன்பழகன்(அன்பு)அவர்களுக்கு கண்ணீர்ப் பூக்கள் சொரிந்து எமது அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்! 
பெற்றோர் முத்தமிட:09.05.1972
 உறவுகள் சத்தமிட:15.09.2012
அன்பு"என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட நேசத்திற்குரியவன்!
நேர்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவன்!
உதவி புரிவதில் கொடையாளனானவன்!
முள்ளிவாய்க்கால் படுகொலையின் பின்
கொண்டாட்டங்களை தவிர்த்து வந்த தேசபக்தன்!

நீ சுகவீனம் காரணமாக எம்மை விட்டு பிரிந்தாய்
என்பதறிந்து அதிர்ச்சியும்,துயரும் கொண்டு நிற்கின்றோம்.
உன் இழப்பு எமக்கு ஈடு செய்ய முடியாதது!
உன் ஆத்மா இறையடி நிழலில் சாந்தி பெற எல்லாம் வல்ல
சக்தியை வேண்டி நிற்கின்றோம்.
அன்னாரது குடும்பத்தாருக்கு எமது ஆறுதல்களை
தெரிவித்துக்கொள்கிறோம்!

எசன் வாழ் தமிழ் மக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக