செவ்வாய், நவம்பர் 12, 2013

ஐந்தாம் ஆண்டு கண்ணீர் நினைவுகள்!திரு,நாகலிங்கம் அரியகுட்டி(சுழிபுரம்)

ஆண்டு ஐந்து ஆனதோ தந்தையே
நீங்கள் எமைப்பிரிந்து?
உங்கள் அன்பு முகம் இன்னும்
பசுமையாய் எம்முள் மலர்கிறது!
நீங்கள் இன்னும் எம்முடன் 
இருப்பதாகவே எமக்குள் தோன்றுகிறது!
வாழ்க்கைப் பாதையில் 
நேர் வழி செல்லக் கற்றுக் கொடுத்தீர்கள் 
அன்பையும் இரக்க சுபாவத்தையும் 
உணவுடன் உணர்வுகளாய் 
ஊட்டி வளர்த்தீர்கள்!
இன்று நீங்கள் மறைந்து விட்டாலும் 
உங்கள் உயிர் எமக்குள் 
வாழ்கிறது தந்தையே!
இன்னும் எத்தனை ஆண்டுகள் போயினும் 
உங்கள் உயிர் எமக்குள்ளேயே 
வாழும் தந்தையே!

உங்கள் நினைவுகளுடன் 
பிள்ளைகள்:
சுழிபுரம்-திருமலை-ஜெர்மனி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக