சனி, பிப்ரவரி 15, 2014

மரண அறிவித்தல்!திரு,இராசையா இலட்சுமணபிள்ளை(புளியங்கூடல்)

புளியங்கூடல் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு,இராசையா இலட்சுமணபிள்ளை அவர்கள் 14-02-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கண்மணி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற இலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, குலசேகரம்(கனடா), ஞானசேகரம்(ஜெர்மனி), கலைமகள், சந்திரசேகரம்(அப்பு), சிவசோதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவயோகம், நாகமுத்து, அன்னப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
பாலபுஷ்பராணி(கனடா), இந்திராணி(ஜெர்மனி), பத்மநாதன், நிர்மலாதேவி, மஞ்சுளா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஐயாதுரை, சுப்பிரமணியம், வைத்திலிங்கம், பூலோகம், திருநாவுக்கரசு, வெற்றிவேல் மற்றும் சரஸ்வதி, விஸ்வலிங்கம், கமலாம்பிகை ஆகியோரின் மைத்துனரும்,
ஜனார்த்தன், லக்சியா, ஆரணியா, அஷ்வினியா, அபிநயா, வித்தியாசினி, பவித்ரா, தனுராஜ், தீபகா, அதீசன், சுவீசன், லக்சன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2014 திங்கட்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
 
தொடர்புகளுக்கு:
குலம் — கனடா
தொலைபேசி: +19059151966
ஞானம் — ஜெர்மனி
தொலைபேசி: +4921312913539
அப்பு — இலங்கை
செல்லிடப்பேசி: +94777580346
சிவா — கனடா
தொலைபேசி: +14168075603 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக