திங்கள், ஜூலை 31, 2017

கண்ணீர் நினைவுகள்!திருமதி பரிபூரணம் கந்தசாமி(புளியங்கூடல்)

வந்தது:19.04.1934 சென்றது:29.07.2017
புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பரிபூரணம் கந்தசாமி அவர்கள் 29.07.2017 அன்று அவரது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி மிகவும் பேரிடியாய் விழுந்தது.மிகவும் நல்ல எண்ணம் கொண்டவர்களாகவும்,அயலவர்களுடன் எல்லாம் அன்போடு பழக்கக்கூடியவர்களாகவும் அவரும் அவரது கணவர்,பிள்ளைகளும் விளங்கினார்கள்.இன்று இந்த தாயாரை புளியங்கூடல் மண் இழந்திருப்பது உண்மையில் ஒரு பேரிழப்புத்தான்.இத்தருணத்தில் அவரது பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள் உள்ளடங்கிய குடும்பத்தினருக்கு எம் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக