திங்கள், ஜூலை 10, 2017

கண்ணீர் அஞ்சலி!திரு கதிரவேலு நவரத்தினம்(தம்பு-வேலணை)

வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்து பின்னர் மனைவி வழி ஊரான நாவற்குழியில் வசித்து வந்தவருமான எமது சித்தப்பா திரு கதிரவேலு நவரத்தினம்(தம்புச்சித்தப்பா)அவர்கள் மண்டைதீவுப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் சிறு காயங்களுக்கு ஆளாகி பின்னர்  அதுவே அவருக்கு நோயாகி காலன் அவரை கொண்டு சென்றான் என்று அறிந்து மிகவும் துயருற்றிருக்கிறோம்.சிறு வயதில் எமக்கு அன்பான கண்டிப்பான சித்தப்பாவாக இருந்தவர்.எம்முடன் எப்பவுமே சிரித்துப்பேசமாட்டார் பயம் இருக்கவேண்டும் என்று நினைப்பார்,என்றாலும் அன்பாக நடந்துகொள்வார்.08.12.1950ல் பிறந்த அவர்,அதே திகதியில் 08.07.2017ல் காலமானார்.சித்தப்பாவின் தந்தை கதிரவேலு,எமது அப்பப்பா கந்தையா,எமது அம்மம்மா பார்வதி ஆகியோர் உடன் பிறந்த சகோதரங்கள் ஆவர்.அன்னாரது ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகிறோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக