புதன், மார்ச் 28, 2018

மரண அறிவித்தல்!திரு,கோபாலபிள்ளை நாகேஸ்வரன்(நாரந்தனை)

உறவாக:04.02.1960-இறையாக:26.03.2018
நாரந்தனையை பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கோபாலபிள்ளை நாகேஸ்வரன்(முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு நிர்வாக உத்தியோகத்தர்,தம்பலகாமம் உதவி அரசாங்க அதிபர்,கரைச்சி பிரதேச செயலாளர்,தற்போதைய கண்டாவளை பிரதேச செயலாளர்)அவர்கள் (26.03.2018)திங்கட்கிழமையன்று காலமானார் என்பதை மிகுந்த துயரோடு அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற கோபாலபிள்ளை மற்றும் தில்லையம்மா மண இணையரின் அன்புப் புதல்வரும்,
சரவணபவன்(முன்னாள் தபாலதிபர் ராஜகிரிய)காலஞ்சென்ற விசாலாட்சி(முன்னாள் ஆசிரியை ராஜகிரிய-மற்றும் சின்னமடு வித்தியாலயம்)ஆகியோரின் மருமகனும்,
மலர்விழியின்(ஆசிரியை யாழ்,இந்துக்கல்லூரி)ஆருயிர்க் கணவரும்,இளம்பரிதியின்(யாழ்,இந்து ஆரம்ப பாடசாலை)பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற நிர்மலாதேவி,மற்றும் பரமேஸ்வரன்,செந்தமிழ்ச்செல்வி,சாந்தினி காலஞ்சென்ற மதியழகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மங்கை,இந்துமதி,விக்னேஸ்வரமூர்த்தி,காந்தரூபி(பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகம் கிளிநொச்சி)மற்றும் காலஞ்சென்ற விஜயன்,செல்வநாயகம் ஆகியோரின் மைத்துனரும்
வித்யா,வினோசன்,ராகவி ஆகியோரின் மாமாவும் 
கரிஷன்,சஞ்சியா,லக்ஸ்மன் ஆகியோரின் சித்தப்பாவும் 
சவிநாத்,யதுசாந்த்,நிரோஷ்,தனுஷ்,கரிஷ் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள்(29.03.2018)வியாழக்கிழமை காலை 8:00மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று 11:30 மணியளவில் அன்னாரது புகழுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பரந்தன் பொது நோக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு மீண்டும் கலாசாலை வீதியூடாக கோண்டாவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர்-009477640573
0094778286504

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக