புதன், ஏப்ரல் 04, 2018

நினைவுகளோடு கண்ணீர் அஞ்சலி!திரு,தம்பித்துரை பாலச்சந்திரன்(பாலு)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,தம்பித்துரை பாலச்சந்திரன்(பாலு)அவர்கள் நேற்றைய தினம் (03.04.2018)காலமானார் என்ற தகவல் அறிந்து மிகவும் கவலைகொண்டு நிற்கின்றோம்.அவரது சண்டிக்கட்டும்,கம்பீர நடையும்,சிரிக்காமல் பேசும் நகைச்சுவையும் இன்னும் அப்படியே கண்களினுள் தெரிகிறது.எல்லோருடனும் இயல்பாக பழகக்கூடியவர்,புளியங்கூடல் சந்தியில் கடை வைத்திருந்தவர்.மிக நல்ல மனிதராகவே வாழ்ந்து வந்தவர்.தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுக்கொண்டவராக முன்னைய காலங்களில் அவரை நாம் கண்டிருக்கின்றோம்.அவரின் இழப்பு என்பது மிகுந்த மன வேதனையை தந்திருக்கிறது.அன்னாரது இழப்பால் தவிக்கும் குடும்பத்தாருக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக