ஞாயிறு, மே 10, 2020

ஓராண்டு நினைவலைகள்!திருமதி,கண்ணம்மா திருநாவுக்கரசு(புளியங்கூடல்-கனடா)

மலர்வு:17.10.1933-உதிர்வு:21.04.2019
ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  திருமதி,கண்ணம்மா திருநாவுக்கரசு  அவர்களின் 1ம் ஆண்டு நினைவலைகள்!

ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்-
தாயே! இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உன் குடும்பம்!
துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே-
இனி எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!
ஓய்ந்துவிட்ட ஓவியமே!
கரைந்துவிட்ட காவியமே!
வளர முடியாத வளர்பிறையே!
வருவாயா? மறுபடியும் எம் தாயே!

தகவல்: குடும்பத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக