வியாழன், ஜூன் 11, 2020

மரண அறிவித்தல்!திரு,மாணிக்கம் சுப்பிரமணியம்(பிள்ளையார்-புளியங்கூடல்)

உறவாக:09.03.1940-உயிராக:10.06.2020
புளியங்கூடல் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,மாணிக்கம் சுப்பிரமணியம் அவர்கள் 10-06-2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான பூந்தோட்ட மாணிக்கம்(பிரபல வர்த்தகர்- கொழும்பு) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், நிர்மலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற மனோகரன், சர்மிளா(இங்கிலாந்து), கல்பனா(இங்கிலாந்து), சோபிகா(சுவீடன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், விஜயகுமார்(இங்கிலாந்து), ஜெயாகரன்(இங்கிலாந்து), சிவேந்திரன்(சுவீடன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சொர்ணகாந்தி, காலஞ்சென்ற தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சோமசுந்தரம், யோகபதி, காலஞ்சென்ற இராஜலிங்கம், தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும், தருண், சஞ்ஜீவன், ஸ்ரீயா, அதிரன், அக்‌ஷயன், அன்விதா, அக்‌ஷரா, பிரியசி, ரித்தியா, ஆதவன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11.06.2020 வியாழக்கிழமை (இன்று) கொழும்பில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

சர்மிளா விஜயகுமார் -
மகள்: 00447900681340

கல்பனா ஜெயாகரன் -
மகள்:00447411118034

சோபிகா சிவேந்திரன் -
மகள்: 004676033360

நிர்மலாதேவி -
மனைவி:0094775707755

கண்ணன் -
பெறாமகன்:0014169049599

சொர்ணம் -
சகோதரி:0094775229227

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக