வெள்ளி, ஜனவரி 01, 2021

இதய அஞ்சலி!திரு,இரத்தினம் நேந்திரராஜா(வேலணை)

வேலணை கிழக்கை [வங்களாவடி]பிறப்பிடமாகவும் ஜெர்மனியிலும் தற்சமயம் வட்டக்கச்சியிலும் வாழ்ந்து வந்தவரும் அமரர்களான இரத்தினம் சரோஜினி மண இணையரின் புதல்வருமாகிய இரத்தினம் நேந்திரராஜா அவர்கள் நேற்று 15.12.2020 செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதறிந்து மிகவும் வேதனை கொண்டோம்,இவரது பெற்றோரும் எமது பெற்றோரும் மிகவும் நட்புடன் பழகி வந்தவர்கள்,எனது பெரியண்ணாவும்[அரசன்]நேந்திரராஜா அண்ணாவும் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்,இந்த இழப்பு என்றுமே மறக்க முடியாத ஒருவரின் இழப்பு!இவரது பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன் அன்னார்தம் ஆத்மா பெருங்குளம் முத்துமாரி அம்பாள் திருப்பாதங்களில் அமைதிபெற வேண்டுவதுடன் அன்னாருக்கு எம் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக